Friday, September 11, 2009

சிறீலங்காவின் தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐ.நா பொதுச் செயலர் செய்துகொண்ட உடன்படிக்கை - பான் கீ மூனின் கோரமுகம் அம்பலம்


சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐக்கிய நாடுகள் (ஐ.நா) பொதுச் செயலர் மகிந்த அரசுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டிருந்த மிகப்பெரும் உண்மையன்று அம்பலத்திற்கு வந்துள்ளது என இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த "ஈழமுரசு" இதழ் தெரிவித்திருக்கின்றது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி இதழே இந்த உண்மையை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் போர் முடிந்த மறுநாள் (ஐ.நா.) சபையின் பொதுச் செயலாளர் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டு உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார்.
தமிழ் மக்களின் அழிவினைக் கூடப் பொருட்படுத்தாமல், தான் சர்வதேச ரீதியில் புகழ் பெறுவதற்காக ஒரு திட்டத்தை வகுத்திருந்த பான் கீ மூன் இந்த உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார். அதாவது, பாதிக்கப்பட்ட தமிழர்களை அரசியல் ஆறுதலை வழங்குவதன் மூலமும், கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுவிப்பதன் மூலமும் இந்த புகழை அடைவதற்கு சிறீலங்காவின் இனப்படுகொலையை மூடி மறைக்கும் பெரும் திட்டத்தை வகுத்துள்ளார்.
அந்தத் திட்டத்தின் பிரகாரம் வன்னி மக்களை விடுவித்தால், அதற்கு பிரதி உபகாரமாக சிறீலங்கா மீது சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் சர்வதேச விசாரணைக்கு கொண்டுவரும் பட்சத்தில், ஐக்கிய நாடுகள் சபை அந்த விசாரணைக்கான ஆதரவினை வழங்காது எனவும், அத்துடன், சர்வதேச விசாரணைகள் இன்றி, போர்க் குற்றங்களை புரிந்த சிறீலங்கா இராணுவத்தினர் மீது சிறீலங்கா அரசாங்கமே விசாரணைகளை நடத்துவதா இல்லையா என்பதை முடிவு செய்யும் எனவும் தான் அறிவிப்பதாக அந்த உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார்.
இந்த உடன்படிக்கை கொடுத்த துணிவிலேயே ஐ.நாவின் உயர் அதிகாரிகளும், மனித உரிமைவாதிகளும் உருவாக்க முனைந்த போர்க் குற்ற விசாரணைகளை சிறீலங்காவின் இராஜதந்திரிகளும், அரச உயர்மட்டத் தலைவர்களும் திமிருடன் அவற்றை உதாசீனம் செய்து புறக்கணிக்கும் துணிவைப் பெற்றிருந்தார்கள்.
இந்த அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம், உலகின் போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் தவறிவிட்டார் என அமெரிக்காவில் வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் இதழ் தனது செய்தியில் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்து பணியாற்றுவதற்காக ஐ.நா. உயரதிகாரிகளையும் மனித உரிமை அதிகாரிகளையும் இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டாம் என பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
அதற்காக அவை நம்பகத்தன்மை அற்றவை என்ற நொண்டிச்சாட்டையும் பான் கீ மூன் உருவாக்கினார் என அவருடன் நெருங்கிப் பணிபுரிந்து ஐ.நா. அதிகாரிகளே இப்போது குற்றச்சாட்டை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், இத்தனையையும் மறைத்து இவரால் மகிந்த ராஜபக்சவிடம் இருந்து போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முடியவில்லை எனவும், இருநாள் போர் இடைவேளையையே அவரால் பெற முடிந்தது எனவும் கூறியுள்ள அவர்கள், இந்தப் படுகொலைகளை மறைத்ததன் மூலம் 20 ஆயிரம் தமிழர்களை அழிக்கும் அளவிற்கு மகிந்த ராஜபக்சவிற்கு இவர் துணைபோயுள்ளார் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதேவேளை, சிறீலங்கா இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துகின்றார்கள் என்றொரு குற்றச்சாட்டினை சர்வதேச ரீதியில் பலமாக முன்வைத்து சிறீலங்காவின் இனப்படுகொலையை நியாயப்படுத்தியதுடன், ஊக்கிவித்தும் உள்ளார் என குற்றச்சாட்டுக்கள் தற்போது அவரைச் சூழ உள்ளவர்களாலேயே எழுப்பப்பட்டு வருவதுடன், அவரது ஆளுமை பற்றிய சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.
பான் கீ மூனின் இந்தச் செயற்பாடுகளானது, ஐ.நா. இராஜதந்திரிகள் இடையே இவரின் இரண்டாவது பகுதி சேவைக்காலம் எதையும் சாதிக்க இயலாத பிரயோசனமற்ற சேவைக்காலமாகவே கருதுகின்றனர்.
இதுஇவ்வாறிருக்க, அதிகாரமற்ற மற்றும் நேர்மையற்ற தனத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைக்கு சாட்சியாக இருந்ததுடன், சிறீலங்கா அரசாங்கத்தை போர்க் குற்றவாளியாக்க தவறியதன் மூலமும் ஐ.நாவின் கட்டமைப்பையும் ஐ.நாவின் கொள்கைகளையும் பான் கீ மூன் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என நோர்வேக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மோனா யூல் பகிரங்கமாக கண்டித்துள்ளார்.
நன்றி சங்கதி

Monday, August 3, 2009


புதைக்கப்பட்ட இலவசக்கல்வியும் விதைக்கப்படாத சமச்சீர்கல்வியும்.


ஒரு பொற்காலம் இருந்தது தமிழ்நாட்டில்.


பஞ்சை பராரிகளின் பரட்டைத் தலையை தடவிக் கொடுத்து பள்ளிக்குப் போகச் சொன்ன காலம் அது. கூழுக்கு உழன்ற ஏழைகளின் வாழ்வுக்கு உதவிய காலம் அது. கல்வியை முழுமையாக அரசே கையிலெடுத்துக்கொண்ட காலம் அது.

கையிலெடுத்துக்கொண்ட கல்வி சிந்தாமல் சிதறாமல் ஏழைக்குழந்தைகளின் வாழ்வைச் சென்றடைந்த காலம் அது.இன்றைய கல்வித்துறையில் ஏன் இத்தனை அவலம்? எத்தனை வகைப் பள்ளிகள்! நமது பள்ளிப்பிள்ளைகளில் எத்தனை வகை ஏற்றத்தாழ்வுகள்! எப்போது தோன்றின இந்தப்பிளவுகள்? ஏன் விளைந்தன இத்தனை வேறுபாடுகள்? காரணம் யார்? மக்களா? அரசா? ஆசிரியர்களா?

பள்ளிப்பருவத்திலேயே இத்தனை வேறுபாடுகளை விதைக்கிறோமே!... எதிர்காலத்தில் வேறுபாடற்ற சமுதாயம் எப்படி விளையும்? கேள்விகள் மட்டுமே இங்கே விளைகின்றன. விடைகளை விளைவிக்க யாரும் இல்லை.

தமிழ்நாட்டில் தற்போது இருந்துவரும் நான்கு வகையான பள்ளிகளையும், பாடத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து சமச்சீர் கல்விமுர்ரையைக்கொண்டுவரும் நோக்கத்தில் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. குழுவும் ஆய்வறிக்கையை அரசுக்கு கொடுத்துவிட்டது. இந்த நான்குவகைப்பள்ளிகளில் மிக அதிகமான எண்ணிக்கையில் வளர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும் மெட்ரிக் பள்ளிகளை கட்டுப்படுத்துவது எளிதான காரியமில்லை என்பது கல்வித்துறையை நன்கு அறிந்தவர்களுக்கு அன்றும் தெரியும்; இன்றும் தெரியும். “பிரச்சினையை ஆறப் போட வேண்டுமென்றால், அதை ஒரு கமிட்டியிடம் தூக்கிப்போடு” என்பது நிர்வாகத்தின் பாலபாடமென்பதும் தெரியும்.

இருந்தாலும், நல்லது ஏதாவது நடக்காதா, என்ற ஆசையோடு இருப்பவர்களுக்கு சமச்சீர்கல்வி பற்றி அரசு வாய்திறக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. இன்று நடப்பதென்ன? அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. விளைவாக பள்ளிகள் எண்ணிக்கையும் குறையும்தானே? மாறாக, மெட்ரிக்பள்ளிகளின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

கல்வி அதிகாரிகள் ஒவ்வொருமாதமும் தலைமை ஆசிரியர்களின் கூட்டங்களை நடத்துவது வழக்கம். ஒரு காலத்தில், “மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்” என்ற இனமே அந்தக் கூட்டங்களில் இல்லாமல் இருந்தது. காலப்போக்கில் கடைசி இருக்கைகளில் ஓரிரு மெட்ரிக்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூச்சத்துடன் நெளிந்துகொண்டு உட்கார்ந்திருந்தனர். அதன்பிறகு “சாம்பலிலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்று ஆசைப்பட்டவர்களின் ஆட்சி வந்தது. இப்போதெல்லாம் மேலே சொன்ன தலைமை ஆசிரியர் கூட்டங்களில் மெட்ரிக்பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஆதிக்கம் அதிகமாகி, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நெளிந்துகொண்டு உட்கார்ந்திருக்கும் காலம் வந்துவிட்டது.

மெட்ரிக் பள்ளிகள் தனியாரின் சொத்துக்கள். அதாவது வருவாய் ஈட்டித்தரும் சொத்துக்கள். மெட்ரிக்பள்ளிகளின் நிர்வாகிகள் இப்போதே கோரிக்கை எழுப்பத் தொடங்கிவிட்டனர். பல இனங்களிலும் வரிக்குறைப்புகோரி குரலெழுப்பத்தொடங்கிவிட்டனர். வரிக்குறைப்பின் மூலம் மாணவர்களின் கல்விக்கட்டணம் குறையுமா என்ன?

அரசுப்பள்ளிகளில் அனுபவம்மிக்க ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அருமையான கல்விமுறை இருக்கிறது. மாணவர்களை ஆளுமை மிக்கவர்களாக மாற்றும் திறனுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். குறைபாடு உடைய இடங்களும் இருக்கின்றன. ஆக்கபூர்வமான கண்டிப்பு அந்தக்குறைபாடுகளை நிச்சயமாக நீக்கிவிடும்..கல்வித்துறையின் குளறுபடிகளால் சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் சிக்கலாகிக்கொண்டுவருகிறது. தற்போது செயல்வழிக்கற்றல் என்ற கற்பித்தல் முறை அரசுப்பள்ளிகளில் கையாளப்பட்டுவருகிறது. இதே முறையை மெட்ரிக்பள்ளிகள் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதில் இருந்தே, அரசின் கையாலாகாத நிலை வெளிப்படுகிறது. ஏற்கனவே பாடத்திட்டத்தில் இருக்கும் வேறுபாடுகளை இதுபோன்ற புதிய திட்டங்கள் அதிகப்படுத்துமே அன்றி, குறைக்கப் போவதில்லை. எனவே சமச்சீர் கல்வி என்ற தத்துவம் சொல்லிக் கொள்ளாமலேயே விடைபெற்றுக் கொண்டுவிட்டது என்பது நிச்சயமாகத்தெரிகிறது.

அரசுப்பள்ளிகளில் சிறப்புக்கட்டணம் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் மெட்ரிபள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பல்லாயிரக்கணக்கணக்கான ரூபாய்கள் முறையான ரசீது இல்லாமல் நன்கொடை என்கிற பெயரில் வாங்கப்படுவதை எப்படி இந்த அரசு அனுமதிக்கிறது? இந்தப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை வாங்குவதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் வரிசையில் ஏன் நிற்கவேண்டும்?

கல்வித்துறையின் இன்றைய செயல்பாடுகள் சாதாரணமக்களுக்கு திருப்தியளிப்பதாக இல்லை.

இன்றை நிலையில் தமிழ்நாட்டில் பணம் உள்ளவர்கள் “எதுவும்” படிக்கலாம். பணமில்லாத ஏழைகள் “ஏதோ” படிக்கலாம் என்பதே உண்மை.

ம.கோ.ராசா(கௌதம்ராஜா)

Saturday, July 18, 2009

எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும

ஆடு நீ... ஆடு நீ... ஓநாய் மாதிரி ஊளையிடாதே.... என்ற ஆட்டுக்குட்டிகளின் பாடலைக் கேட்க ஓநாய் அந்த ஏரியாவிலேயே இல்லை. அதன்பிறகு அதற்கு வாலும் இல்லை, வாலாட்டுவதுமில்லை. ஆளைப் பார்க்கவேண்டியது அவசியமில்லை, வாலைப் பார்த்தாலே போதும் என்பதை ஆடுகள் மட்டுமல்ல... அனைவருமே அறிந்துகொள்ளவேண்டும்.
உண்மைகளை வதந்திகள் என்றும் வதந்திகளை உண்மைகள் என்றும் நம்பவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக யாராவது அழுது புலம்பினால், உடனேயே கண்ணீர்க் கூட்டணி அமைத்துவிடக்கூடாது. அழுபவர் கிளிசரின் போட்டிருக்கிறாரா என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அதைவைத்து எது ஒரிஜினல், எது டூப்ளிகேட், எது வதந்தி, எது உண்மை என்பதையெல்லாம் விளங்கிக் கொள்ளமுடியும்.
கடந்த 60 ஆண்டுகளில் இப்போதுதான் என்றுமில்லாத அளவுக்கு பலவீனமாகி நிற்கிறோம்...
என்று மூக்கைச் சீந்துவது எதற்கு? நம்மை பலப்படுத்துவதற்கா, மனத்தளவில் பலவீனப்படுத்துவதற்கா? இவ்வளவு பாசத்தோடு நமக்கு பந்தி வைப்பவர்கள் பாயாசத்தை வைப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்!
ராம் அண்ணன் அடுக்கெடுக்கிறார் என்பது கதை....மீண்டும் பாய்வார்கள் என்பது வதந்தி..... சாதித்துக் காட்டுவார்கள் என்பது கற்பனை... என்றெல்லாம் இப்போது எழுதியிருக்கும் இதே பேனா தான், 30 ஆண்டுகளாக பிரபாகரன் கட்டிவளர்த்த தமிழ் சாம்ராச்சியம் அவர் கண்களுக்கு முன்பே துகள்களாக உடைந்து நொறுங்கி மண்ணோடு மண்ணாகிவிட்டது என்று முன்பு எழுதியது. அதன்மூலம் தனது கண்ணீர் ஆனந்தக் கண்ணீர் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்தது. இத்தகைய பதிவால் தான், தாங்கள் யாரென்பதை அவர்கள் அடையாளம் காட்டுகிறார்கள்.

மிகக் கடுமையாக விமர்சித்து ராஜபட்சேவை கோபப்படுத்துவதால் பயனில்லை, அதனால் அப்பாவித் தமிழர்கள்தான் தேவையில்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாட்டிலிருந்து ஒரு குரல் எழுகிறது. உணர்ச்சிப் பெருக்கோடு எதையாவது செய்ய முனைவது சிங்கள வெறியர்களை உசுப்பேற்றி விடும், அது வன்னியில் ஆபத்தில் இருப்பவர்களை பேராபத்தில் தள்ளும் என்று வெளி உலகிலிருந்து ஒரு குரல் வருகிறது. இரண்டுமே சாதுர்யம் பேசுகின்றன.

இவர்களை மாதிரி ஆட்கள், தகுதியே இல்லாதவர்களிடம் போய் தட்டேந்தி விடக்கூடாது என்பதற்காகத் தான் 1987 செப்டம்பரிலேயே மிகவும் தெளிவான தமிழில் பிரகடனம் செய்தான், எங்கள் இனத்தை எழுப்பிநிறுத்திய வீரத்தியாகி திலீபன்.

இழந்த உரிமைகளை நாம் மீட்டெடுக்கவேண்டும். மற்றவர்களைக் கொண்டு அதை வெல்லலாம் என்று எதிர்பார்க்கவே கூடாது என்றான் அவன், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதத்தைத் தொடங்கும்போது. நாட்டுக்காகத் தன்னைத் தியாகம் செய்த திலீபனின் வார்த்தைகளை தங்களுக்காக நாட்டைத் தியாகம் செய்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

திலீபன் பேசியது, செப்டம்பர் 14ம் தேதி.. அதற்கு 40 நாளுக்கு முன், ஆகஸ்ட் 4ம் தேதி சுதுமலையில் பேசினார் பிரபாகரன். அந்தப் பேச்சு ஒரு தேர்ச்சி பெற்ற அரசியல் தலைமையின் பேச்சுக்கு இணையானதாக இருந்தது. 1987 ஜூலை 29ல் ராஜீவ்-ஜெயவர்தன ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

அந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக இல்லை. அதை ஏற்கமறுக்கும் பிரபாகரனிடம், நீங்கள் இதை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை, எதிர்க்காதீர்கள் என்கிறது இந்தியா. பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முன்வருகிறார் பிரபாகரன். மறுவாரம், சுதுமலை கூட்டத்தில் மக்களைச் சந்திக்கிறார். அந்தக் கூட்டத்தில் பிரபாகரன் பயன்படுத்திய வார்த்தைகள் வரலாற்றின் கவனத்தில் வைக்கப்படவேண்டியவை.
நாம் இந்த ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எம் மக்களுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம் என்றார் பிரபாகரன். இதைவிட நறுக்குத் தெறித்தாற்போல் வேறெவர் பேசமுடியும்? இதுதான் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல். இந்தியாவுக்கு மட்டும் எப்படி இது விளங்காதுபோயிற்று? அந்த மக்களை, ராஜீவின் ராணுவம் பாதுகாத்த லட்சணம் என்ன?

புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே, அவர்களை இங்கே வரவைத்து இவர்களுடன் மோதவிட்டேன் என்று வெளிப்படையாகவே சொன்னார் ஜெயவர்தன. ஸ்மார்ட் ஆக இல்லாததால் தான், ராஜீவ் தரப்புக்கு இது புரியாமல் போயிற்று. தொப்புளாவது கொடியாவது என்று தப்புதப்பாக இந்தியா முடிவெடுப்பது அப்போதிருந்துதான். இந்த இந்தியாவின் துணையுடனா ஸ்மார்ட் பவர் பேர்வழிகள் தேரை நகர்த்தப் போகிறார்கள்!
இவர்கள் தேரையும் நகர்த்தவேண்டாம், போரையும் நடத்தவேண்டாம். தாமதமில்லாமல் செய்யவேண்டிய வேலைகளில் ஈடுபட தாமாகவே முன்வரும் ஈடுஇணையற்ற சக்தியான இளைய தலைமுறையினரைக் குழப்பாமல் இருந்தால் அதுவே மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
வதை முகாம்களில் உள்ள மூன்று லட்சம் தமிழர்கள் என்ன செய்யப்படுவார்கள் என்பது கோதபாயவுக்கே தெரியாது. மகிந்த ராஜபட்சேவை என்ன செய்வதென்றே அவன் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்தநிலையில், 180 நாளில் மீள்குடியேற்றம் என்று ராஜபட்சே சொல்வதை, வடிகட்டிய அறிவாளியான இந்தியாவைத் தவிர வேறெவரும் நம்பப்போவதில்லை. 880 சதுர கிலோமீட்டர் கொண்ட யாழ்குடாவில், 160 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு உயர் பாதுகாப்பு வலயங்களில் சிக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இத்தனை ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் நடந்துவிடாத மீள்குடியேற்றம், 180 நாளில் வன்னியில் நடந்துவிடப் போகிறதா? அறிவுள்ளவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள். ராஜபட்சேவுக்கு கருணை மனு எழுதிக்கொண்டிருக்கமாட்டார்கள். நடந்த இனப்படுகொலைக்கு சாட்சியங்களாகத் திகழ்ந்தவர்கள் மருத்துவர்கள் சத்தியமூர்த்தி, வரதராஜா, சண்முகராஜா போன்றோர். அவர்களைப் போன்றவர்கள் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பில் இருந்தால்தான், உண்மைகள் வெளிவரும்.
அவர்கள் கோதபாயவின் பிடியில் இருந்தால், ஹிந்து பத்திரிகையின் மொழியில்தான் பேசவேண்டி இருக்கும். முல்லைத்தீவில் விமானத்திலிருந்து குண்டுவீசியது இலங்கை விமானப்படையினர் அல்ல, புலிகள்தான் விமானத்திலிருந்து குண்டுவீசினார்கள் என்றுகூட சொல்லவேண்டியிருக்கும்.
இது நம்முடைய கருத்து மட்டுமல்ல. சர்வதேச அமைப்பான அம்னஸ்டியும் இதைத்தான் சொல்கிறது. தங்களுடைய மக்களைக் கைவிட்டுவிடாமல் பங்கருக்கு உள்ளே இருந்துகூட மருத்துவம் பார்த்த அந்த மருத்துவர்கள் உள்ளேயும், ராஜபட்சே கும்பல் வெளியேயும் இருப்பது மனித இனத்துக்கே அவமானம். அந்த மருத்துவர்களை வெளியே கொண்டுவர உடனடி நடவடிக்கைகள் தேவை.

ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேரையும் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோரையும் கொன்று குவித்து இனவெறியாட்டம் நடத்திய ராஜபட்சே சகோதரர்களையும் சிங்கள அதிகாரிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான சர்வதேச சூழல் உருவாகியிருக்கிறது. உலகெங்கிலுமுள்ள மனித உரிமை அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தமிழ் மாணவர்களாலும் இளையோராலும் நிச்சயமாக முடியும்.
தங்களைக் காத்துக் கொள்ளவேண்டிய நிலைக்கு அந்த அரக்கர்கள் தள்ளப்படும்போதுதான், இலங்கையின் திமிர் அடங்கும். தமிழரின் குரல்வளையின் மீதான பிடி விலகும். இதன் முதல்படியாக, நடந்த இனப்படுகொலை தொடர்பான ஆவணப்படங்கள் போன்றவற்றை உலகெங்கிலுமுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் திரையிடத் தேவையான முயற்சிகளை இளையோரும் மாணவர்களும் எடுக்கலாம். ராஜபட்சேயின் பொய்முகத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்துவதற்கான முதல்படி இது.
அடுத்த படி இதைவிட முக்கியமானது.

எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும் என்கிற யதார்த்தம் ராஜபட்சேக்களுக்கும் பொருந்தும். உண்மையில் எதைப் பெற ராஜபட்சேக்கள் தகுதியானவர்களோ அதை அவர்கள் பெற ஆவன செய்ய ஆரம்பித்தாலே போதும், ஆட்டம் அடங்க ஆரம்பித்துவிடும். தன்னுடைய சொந்தமக்கள் மீதே விமானங்கள் மூலம் குண்டுவீசும் நாடு என்னுடைய இலங்கைதான். இதைச் சொல்வதற்காகத் தான் என்மீது தேசத் துரோகி என்று முத்திரை குத்தப்படுகிறது. இதைச் சொல்வதுதான் தேசத்துரோகம் என்றால் அந்த முத்திரையைப் பெருமையுடன் ஏற்கிறேன் என்று வெளிப்படையாகப் பேசியதற்காகவே கொல்லப்பட்டான் லசாந்த.

மகிந்தவின் நண்பனான லசாந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டதில் மகிந்தவுக்குத் தொடர்பிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினர். லசாந்த படுகொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் பயங்கரம் வரை சர்வதேச அரங்கில் ராஜபட்சேக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன. உலகின் எந்த இனவெறியனுக்கு எதிராகவும் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்ததில்லை. ஆனால் இவ்வளவு ஆதாரங்கள் இருப்பது தெரிந்தும், தங்களைத் திசைதிருப்பப் பரப்பப்படும் வதந்திகளால் தடுமாறுகிறது தமிழ்ச் சமூகம்.

ஆம்புலன்ஸில் தப்பமுயற்சித்தபோது சுட்டோம், நந்திக் கடலில் உடல் கிடைத்தது, எரித்துவிட்டோம், கடலில் கரைத்துவிட்டோம், கோடாரியால் வெட்டினோம்........ என்பதெல்லாம் 100 வீதம் உடான்ஸ். எதற்கு இப்படிப் பொய்சொல்லவேண்டும்? இப்படியெல்லாம் புதிய புதிய வதந்திகளைக் கிளப்பி விட்டுக்கொண்டே இருந்தால் தான், அதி புத்திசாலிகளான நாம் அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். இருக்கிற ஆதாரங்களை ஆவணப்படுத்தி, ராஜபட்சேவைக் கூண்டில் ஏற்றும் வேலையை அடியோடு மறந்துவிடுவோம். இதைத்தான் எதிர்பார்த்தது இலங்கை. அதைத்தான் செய்கிறோம் நாம்.

எனவே, ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றும் முயற்சியில் இளையோர் அதிலும் குறிப்பாக மாணவர்கள் முழுமூச்சோடு இறங்கவேண்டும். கொலைவெறி அடங்காத ராஜபட்சேக்களுக்குக் கிடுக்கிப்பிடி போட்டால்தான், அவர்களுக்கு சர்வதேச அரங்கில் தண்டனை நிச்சயம் என்கிற நிலையைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஏற்படுத்தினால்தான், கொதிப்பது அடங்கும்.
அவர்களை ஆத்திரப்படுத்துவதைவிட அம்பலப்படுத்துவதுதான் இப்போதைக்கு முக்கியம். இப்படியொரு நிலையை உருவாக்க முயலும்போது இதற்கு என்னென்ன விதத்திலெல்லாம் முட்டுக்கட்டைகள் போடப்படும் என்று முதலிலேயே ஆலோசிப்பதும் அதை எப்படிச் சமாளிப்பதென்று முன்கூட்டியே தீர்மானிப்பதும் அவசியம்.

சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்கான சகல 'தகுதி'களும் ராஜபட்சேக்களுக்கு இருக்கிறது. அந்தக் கூண்டில் நிறுத்தப்பட்டால், தண்டனையிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது. அதனால்தான், அந்தக் கூண்டில் நிறுத்தப்படுவதைத் தடுக்க தனக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகளின் காலில் தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்துகொண்டிருக்கிறார்கள் "இந்தியாவின் போரை நடத்தியவர்கள்".
குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தியபிறகு செய்யவேண்டிய வேலைகளை இப்போதே பட்டியலிட முடியும். ஆனால், இப்போதைக்கு நாம் தாமதமின்றிச் செய்யவேண்டியது, குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தத் தேவையான வேலைகளைத்தான். குற்றவாளிக் கூண்டில் ராஜபட்சேக்களை ஏற்ற, சர்வதேச சமூகத்தை அணுகுவதற்குமுன், உலகெங்கும் சிதறிக்கிடக்கிற தமிழ்ச் சமூகத்தை அணுகுவது அவசியம்.

அந்தப் பணியையும் கூட தமிழ் மாணவர்களே முன்னெடுப்பது நல்லது. ஐரோப்பிய நாடுகளிலும், பிரிட்டன், கனடா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த மாணவர்கள் உடனடியாகக் கூடிப்பேசி, ஒரு குறிப்பிட்ட நாளில் உலகெங்கும் மனிதச் சங்கிலி அமைப்பதென்று தீர்மானிக்கலாம். (போராட்டத்தின் வடிவம் வேறுமாதிரியாகவும் இருக்கலாம். அது ஜனநாயக முறைப்படி கலந்துபேசி எடுக்கப்படவேண்டிய முடிவு.)

போர்க்குற்றங்களுக்காக ராஜபட்சேக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகெங்கும் ஆதரவு திரட்டும் தூதுக்குழு ஒன்றையும் அவர்கள் அமைக்கவேண்டும். அந்தத் தூதுக்குழுவில், மாணவர்களும் மாணவிகளும் சம எண்ணிக்கையில் இடம்பெறவேண்டும். அந்தத் தூதுக்குழு தனது பணியைத் தமிழகத்திலிருந்தே தொடங்கலாம்.
தமிழகத்துக்கு வருகிற மாணவர்கள் தூதுக்குழு, முதலில் முதல்வர் கலைஞரையும்,அடுத்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அதைத் தொடர்ந்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசலாம். ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன், இரவு-பகல் என்கிற வித்தியாசமெல்லாம் பார்க்காமல் ஒரே நாளில்-ஒரே சமயத்தில் உலகமெங்கும் மனிதச் சங்கிலி நடத்தத் தீர்மானித்திருப்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லலாம்.

அதற்குத் தேவையான ஆவணங்களைக் காட்டுவதன்மூலம், அவர்களது ஆதரவை நிச்சயமாகப் பெறமுடியும். தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, அவரை ஏன் பார்க்கவேண்டும், இவரை ஏன் பார்க்கவேண்டும், அவர் வந்துவிடுவாரா, இவர் வந்துவிடுவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பும் அதிமேதாவிகளை அலட்சியப்படுத்தி அனைவரையும் சந்திப்பது மிக மிக முக்கியம். அந்த மனிதச் சங்கிலிக்கு தாய்த் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் உறுதி செய்தபிறகு, உலகெங்கும் பயணம் செய்து அந்தத் தூதுக்குழு ஆதரவு திரட்டலாம்.

செல்லும் இடமெல்லாம் அவர்களை வரவேற்க ஊரே கூடியிருக்கும். உலகெங்கிலும் மட்டுமல்ல, சென்னையிலும் அவர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பு கிடைக்கும். அன்றைய தினம் சென்னையில் அந்தத் தூதுக்குழுவை வரவேற்க, தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் திரளுவார்கள் என்று இப்போதே சொல்கிறேன்.... எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விஷயத்தை மாணவர்கள்தான் முன்னெடுக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. பழைய ஆசாமிகள் காகிதப் புலிகளாகவும் காமெடி எலிகளாகவும் மாறிவிட்டபிறகு, உலக வீதிகளில் எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் என்கிற பதாதைகளுடன் துணிவுடன் வலம் வந்தவர்கள் இந்த இளைய புலிகள்தான்.
ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற தமிழ் மாணவர்களின் கோரிக்கையுடன் இரவென்றும் பகலென்றும் பாராமல் உலகம் முழுக்க ஒரே சமயத்தில் கோடானுகோடித் தமிழர்கள் கை கோத்து நிற்பது உலகின் மனசாட்சியை உலுக்கும், ராஜபட்சேவின் அலரி மாளிகையைக் குலுக்கும், ராஜபட்சேக்களுக்கும் குற்றவாளிக் கூண்டுகளுக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்க்கும். அதற்குப் பிறகு மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுக்களாலோ அக்பர் ரோடு அக்காக்களாலோ கூட மகிந்த ராஜபட்சேவைக் காப்பாற்றமுடியாது.

இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதச் சங்கிலியை அமைக்க உலகெங்கிலும் இருக்கும் எங்கள் தமிழ் இளையோராலும் மாணவர்களாலும் நிச்சயமாக முடியும். ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கைகோத்து நிற்கவைப்பதற்கான தகுதியும் உறுதியும் இந்தப் பொடியன்களுக்கு இருக்கிறது. தங்களுக்காக தாயகக் களத்தில் உயிர்நீத்த ஆயிரமாயிரம் மாவீரர்களை மனத்தில் சுமந்துகொண்டிருக்கும் இந்த இளைய தலைமுறைக்கு, இப்படியொரு வரலாற்றைப் படைக்கவேண்டிய கடமயும் இருக்கிறது.

சர்வதேச அரங்கில், போர்க் குற்றவாளியாக ஒரு சிங்கள இனவெறியன் அல்லது வெறியர்கள் நிறுத்தப்படும் போதுதான், இலங்கையின் ஆணவமும் அராஜகமும் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையும் அடங்கும். அப்படியொரு நிலையில், எப்படியெல்லாம் தமிழினத்தை நசுக்கலாம் என்று யோசிக்கக்கூட நேரமின்றி, எப்படித் தங்களைக் காப்பாற்றிக்கொள்வது என்று யோசிப்பதற்கு மட்டுமே ராஜபட்சே கும்பலுக்கு நேரமிருக்கும்.
ஒட்டுமொத்த சிங்கள வெறியர்களின் நச்சுப்பல் பிடுங்கப்படும். அதன்மூலம் முகாமுக்குள்ளேயே முடிந்து போக இருக்கும் 3 லட்சம் தமிழர்களின் மூச்சுக்காற்று உயிர்த்தெழும். அவர்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய நிலை ராஜபட்சேவுக்கு ஏற்படும். ஆக, எரிவதைப் பிடுங்கினால் தான் கொதிப்பது அடங்கும்.

ராஜபட்சேவை ஆத்திரப்படுத்தாதீர்கள் என்று சொல்வது அர்த்தமற்றது என்பதை, அப்படிச் சொல்பவர்களுக்கு முதலில் எடுத்துச் சொல்லவேண்டியது அவசியம்தான். அதே சமயம், நம்மீதான அக்கறையில்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும். அவர்கள் கையையும் பற்றியபடிதான் மனிதச் சங்கிலி அமைக்க முடியும்.
இதையெல்லாம் எடுத்துரைக்க எழுத்தைப் பயன்படுத்தாமல், இறக்காதவர்களுக்குக்கூட இறப்புச் சான்றிதழ் எழுதி புழுதி கிளப்பிக் கொண்டிருப்பவர்கள் இனியாவது உருப்படியான வேலைகளில் இறங்குவார்களாக! எவருக்கும் துதி பாடுவது எனது நோக்கமல்ல என்று சொல்லிக்கொண்டே துதி பாடுவது சுமந்த வயிற்றுக்கும் அழகல்ல, சுமக்கும் மண்ணுக்கும் அழகல்ல.

மனிதாபிமான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை உலகுக்கே எடுத்துக் காட்டியுள்ளோம் என்று ராஜபட்சே குறுக்குசால் ஓட்ட முயல்வது, இலக்கை விட்டுவிட்டு உலக்கை போட்டுக்கொண்டிருக்கும் சிலரது அறியாமையால் தான்.

எனவே, துளியும் தாமதமின்றி அடுத்த கட்டத்துக்கு நகர்வோம். நச்சு எலிகள் தப்பிக்கவே முடியாதபடி கிடுக்கிப்பிடி போட்டுப் பிடிப்போம். அதற்காக, மனிதச் சங்கிலியோ,, அதைவிட மகத்தான பணியோ... எதுவாயிருந்தாலும் அவற்றில் அளவுகடந்த ஈடுபாடு காட்டுவோம். நமது எழுச்சி, எதிர் நிலையில் இருப்போரைக்கூட நம்முடன் இணைந்துகொள்ளச் செய்யும்.
பெரியகுளத்துக் கவிஞன் மு.மேத்தா சொன்னதைப் போல்,
நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த மலர்கள்கூட ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக்கொள்ளும்!
கண்ணீரைத் துடைத்து எறிந்துவிட்டுஇ உறுதியோடும் நம்பிக்கையோடும் ஓர் உண்மையான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒவ்வொருவரும் முன்வருவோம்.

வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை
நம் சொந்தங்களை ரத்தம் சிந்தவைத்த
நச்சுப் பாம்புகளை நையப்புடைப்போம்....
ரத்தம் குடித்த ராஜபட்சிகளை
சர்வதேச கூண்டில் ஏற்றுவோம்....
இறக்கை என்பது இயற்கையின் எல்லை,
இயலாதென்று முயலாதவர்கள்
இறக்கை இருந்தும் பறப்பது இல்லை.
முத்துக்குமாரின் நினைவோடு
ஒட்டுமொத்த உலகத்தையும்
திரும்பிப் பார்க்கவைத்த
எங்கள் இளையோரின் அகராதியில்
இயலாது என்ற வார்த்தையே இருக்க இயலாது.
அந்தப் பொடியன்களின் தலைமையில்
உலகத் தமிழினத்தைக் கைகோக்க வைப்போம்....
களங்கத்தைத் துடைப்போம்... வரலாறு படைப்போம்!
ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றுவதுதான், கம்பிவேலிகளுக்குப் பின்னால் கண்ணீருடன் நிற்கும் எங்கள் சொந்தங்களுக்கு விடுதலை வாங்கித் தரும். ராஜபட்சேக்கள் உள்ளே போகிறவரை, எங்கள் சொந்தங்கள் வெளியே வரமுடியாது என்பதை மனத்தில் நிறுத்தி,இன்றே இப்போதே களத்தில் இறங்குவோம்.
தமிழ்க்கதிருக்காக,
காற்றுக்கென்ன வேலி திரைப்பட இயக்குநர்
- புகழேந்தி தங்கராஜ்

Monday, July 13, 2009

கறுப்பு யூலை



மிகக் கொடூரம் வாய்ந்ததும் சோகம் நிறைந்ததுமான கறுப்பு யூலை இனக் கலவரங்கள் நடந்து 21 ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையிலும்ää அந்த தமிழினப் படுகொலைகளின் வேதனைகளும் வடுக்களும் எந்த ஒரு தமிழனின் இதயத்தை விட்டும் விலகாமல் இருக்கும்.
1983ம் ஆண்டு யூலை மாதம், இலங்கைத்தீவில் நடைபெற்ற இனக்கலவரம் என்கின்ற படுகொலைகள்ää சிறிலங்கா அரசின் அநாகரிக கலாச்சாரத்தின் கேவலமான கீழ் நிலையை உலகத்திற்கு எடுத்துக் காட்டின. இந்தத் தமிழிப் படுகொலைகள்ää திடீரென ஓர் ஆவேசத்தல் நடாத்தப்பட்டதல்ல. ஒரு பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிடப்பட்டு, முறையாகச் செயல்படுத்தப்பட்ட இனப் படுகொலைகள் தான் யூலை 83 தமிழினப் படுகொலைகள்.
அந்த வாரம் ஆயிரக்கணக்கில் அப்பாவித்தமிழ் மக்கள் ஈவு இரக்கமின்றி வெட்டிக் கொல்லப்பட்டனர் - தீயிட்டு கொழுத்தப்பட்டனர். கோடிக்கணக்கில் தமிழர்களின் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டன. அது மட்டுமல்லää சிறைச்சாலைக்குள்ளும் கோரக்கொலைகள் நடாத்தப்பட்டன. தங்கத்துரை. குட்டிமணி உட்பட 53 தமிழ்; இளைஞர்களை குண்டர்கள் குத்திக் குதறிக் கொன்றார்கள். ஒரு பயங்கரவாத அரசாங்கத்தின் சகல சக்திகளும் ஒருமுகப்பட்டுää தமிழ் இனத்தின் மீது கோரத்தாண்டவம் ஆடின.
1983ம் ஆண்டு யூலை மாத இனக்கலவரங்கள்ää தமிழ் மக்களுக்குப் புதிதான ஒன்றல்ல. 1956-1958-1974-1977 என்று அதற்கு முன்னரும் மாறி மாறி வந்த சிங்கள அரசுகளால் பல தடவைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழினப் படுகொலைகளின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் 83 கறுப்புயூலை. நாசத்தையும் அழிவையும் தமிழீழ மக்களுக்குத் தந்த இந்த யூலை 83 இனப்படுகொலைகள் இன்னொரு விதத்தில் சிலருக்கு நன்மைகளையும் தந்தது என்பதும் உண்மைதான்! ஆம், இலங்கைத்தீவில் தமிழருக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் புலம்பெயர்ந்த மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை அமைத்திடுவதற்கு வெளிநாடுகள் அனுதாபத்துடன் அனுமதி அளித்ததற்கும் இரத்தம் தோய்ந்த யூலை 83 காரணமாக அமைந்தது. 21 ஆண்டுகளுக்கு முன்பு நாகரீக உலகில் அதிர்ச்சி கொள்ளக்கூடிய வகையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் பின்னர் ஓய்ந்தனவா என்று கேட்டால்ää அதற்குரிய பதில் கசப்பானதாகத்தான் இருக்கும்.ஆமாம்! யூலை 83 ஒரு தூசுக்கு சமன் என்கின்ற விதத்தில் பின்னரும் தமிழர்கள் நளாந்தம் படுகொலை செய்யப்பட்டதும்ää கைது செய்யப்பட்டதும்ää கைது செய்து காணாமல் போனதும்ää தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டதும்ää செம்மணி போன்ற மனிதப் புதைகுழிகளில் போய் தெரியாமல் உறங்கிப் போனதும் தொடர்ந்தும் நடைபெற்றன.யூலை 83ல் இலங்கையின் பல இடங்களில் இருந்தும் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட போதுää தன் தனயர்களைக் கைநீட்டி வரவேற்றுக் கட்டித் தழுவியது யாழ்குடாநாடு. ஆனால் அதே யாழ் குடாநாடு இரவோடு இரவாக ஒரே நாளில் தனது மைந்தர்கள் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அரச பயங்காரவாதம் காரணமாக அகதிகளாக அல்லல்பட்டு இடம்பெயர்ந்ததையும் பின்னாளில் கண்டு கதறியது.
வாழையடி வாழையாக வாழ்ந்தவர்கள்ää வந்தரையும் வாழ வைத்தவர்கள்ää சொந்த நாட்டிலேயே சுகம் இழந்துää சுற்றம் இழந்து சோகத்தில் மரநிழலில் - வீதியோரத்தில் - காடுகளில் வாழவேண்டிய காலமும் வந்தது. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில்ää தினமும் செத்துப் பிழைத்த அந்த ஜீவன்களுக்கு யூலை 83 ஒரு தூசு அல்லவா?ஆமாம் அன்பர்களே! யூலை 83 மீண்டும் தொடர்ந்தது - வித்தியாசமான விதத்தில் - வேற்று வடிவங்களில் தினம் தினம் ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு யூலை 83 தொடர்ந்தும் செயற்பட்டது. ஆனால் அதற்கு வேறு பெயர்கள் இடப்பட்டன.
சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள்ää அவற்றின் உண்மையான பெயர் யூலை 83 உணவுத்தடை - அதன் மறுபெயர் யூலை 83! மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தடை - அதன் சரியான பெயர் யூலை 83! மனித உரிமை மீறல்கள்- அதன் ஆரம்பப் பெயர் யூலை 83! காணாமல் போனோரின் கதை - அதன் உட்பெயர் யூலை 83! கிருஷாந்தி போன்றோரின் கண்ணீர் கதறல்கள் - அதே கறுப்பு யூலை 83!அன்பர்களே! 83 யூலை மாதம் மட்டும்தான் ஞாபகம் இருக்கின்றதா? 83ல் இருந்து ஒவ்வொரு நாளும் ஈழத்தில் நடந்த அக்கிரமங்கள் அட்டூழியங்கள் அநியாயங்கள் யாவும் மறந்து போகுமா என்ன?யூலை 83... என்று நினைத்துக் கலங்கிவிட்டுச் சும்மா இருக்கும் நேரமல்ல இது. உரிமையிழந்து பின்னர் உடமையிழந்து, இப்போது உயிர் கொடுத்துப் இப்பவும் போராடுகின்ற எமது இனத்தின் உணர்வுகளுக்கு நம் தோள் கொடுக்க வேண்டிய நேரமிது. சொல்லொண்ணாக் கஷ்டங்களை அனுபவித்த எமது மக்கள் இன்று தமது அடிப்படை வேட்கைகளாக தாயகம் - தேசியம் -சுயநிர்ணய உரிமை என்பனவற்றை வெளிப்படுத்தி அவற்றை அரசியல் ரீதியாக சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாகப் பெற்றிடலாம் என்ற நம்பிக்கையில் எமது இனம் காத்து நிற்கின்றது.
அவர்களது அடிப்படை வேட்கைகள் நிறைவேறுவதற்கு நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.! அவர்களது இலட்சியத்தை அடைவதற்கு தோள் கொடுப்போம். மறவர் கைகளைப் பலப்படுத்துவோம். நாளைப் பொழுது தமிழர் வாழ்வில் நல்லபடியாக மலரும் என்ற நம்பிக்கை வரவேண்டுமென்றால் அதற்கு நாமும் நமது கடமையைச் செய்திட வேண்டுமல்லவா?

எம் மக்கள் உணர்ச்சிஎன் உண்மை வெளிப்பாடு


மெனிக்பாம் அகதி முகாமில் மகிந்த மூத்தமகன் மீது மக்கள் சேறடிப்பு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல்கள்




வவுனியா ஏதிலிகள் முகாமுக்கு பயணம் செய்த மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச மீது பொதுமக்கள் சேறடிப்பு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை வவுனியா மெனிக்பாம் ஏதிலிகள் முகாமுக்குச் ஊடகவியலாளர்களுடன் சென்ற நாமல் ராஜபக்ச மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இளையோர்களின் செயற்திட்டம் குறித்த விடயங்களை முன்னெடுப்பதற்காகவே அங்கு சென்றிருந்தார்.
தாக்குதல்கள் சம்பவங்களை அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களை எடுத்திருந்த போதும் அவற்றை நாமல் ராஜபக்ச பறித்து அளித்துள்ளார். இதனால் பல ஊடங்களில் தாக்குதல்கள் தொடர்பான பதிவுகள் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Monday, June 29, 2009

சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிப்போம்

என்று மில்லாதவாறு, பெரும் தொகை நிதியை ஒதுக்கி, பிராந்திய வல்லரசினதும், உலக வல்லரசினதும் ஆதரவுடன், ஆசீர்வாதத்துடன், இன அழிப்புப் போரை மிகவும் தீவிரமாக, வெறித்தனத்துடன் மேற்கொண்டுவருகின்றது ராஜபக்ச அரசு.
மிகவும் நெருக்கடியான, அதி முக்கியமான காலகட்டத்தில், நாளாந்தம், ஐம்பது, நுாறு பேர் என, எங்கள் மக்கள், சிங்கள இனவெறி அரசின் குண்டு வீச்சுக்களாலும், எறிகணை வீச்சுக்களாலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்படுகின்றனர். பச்சிளம் பாலகர்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் என அனைவரும் பால் வயது வேறுபாடின்றி, கால்வேறு கைவேறாய், தலைவேறு முண்டம் வேறாய், பிய்த்து எறியப்படும் கொடுமை வன்னி மண்ணில் அரங்கேறுகிறது.

சாவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர் எங்களது மக்கள். இந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்டு தடுத்து நிறுத்துவார் யாரும் இலர். எமது துணைக்கு யாரும் இலர். எம்மை ஆதரிப்போர் யாரும் இலர். எமக்காகக் குரல் கொடுப்போரும் யாரும் இலர். ஆனால், எமது மக்களுக்காக நாம் இருக்கின்றோம் அல்லவா. நாம் இருக்கின்றோம் என்றால், ஊர்வலம் போகின்றோம், கோசங்கள் எழுப்புகின்றோம், நினைவு வணக்கக் கூட்டங்கள் நடத்துகின்றோம், ஆர்ப்பாட்டம் செய்கின்றோம் அல்லது எமது மக்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்ய பங்களிப்புச் செய்கின்றோம்.இத்துடன் முடிந்ததா..? நாம் இருக்கின்றோம் என்ற ஆதரவுப் பாத்திரத்தின் பணி.

உண்மையில், புலம்பெயர்ந்து வாழும் மக்களிடத்தே போராட்டத்திற்கான பெரும் பணி காத்துக்கிடக்கிறது என்ற உண்மையை நாம் புரிந்து வைத்திருக்கின்றோமா? சிறீலங்கா அரசு மீதான, பொருளாதாரத் தடையை உலக நாடுகள் ஏற்படுத்தாதா என்று அங்கலாய்க்கின்றோம். சிறீலங்காவிற்கான ஏற்றுமதி வரிச் சலுகையை நீடிக்க வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் அழுது மன்றாடுகின்றோம். சிறீலங்கா மீதான தண்டனைத் தடைகளைப் போடுங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்கின்றோம். ஆனால் நாம்? நாம் எம் விடயத்தில் செயலற்று சோம்பிக் கிடக்கின்றோம்.

சிறீலங்கா அரசை பணியவைப்பதற்கான மிகப்பெரிய துருப்புச் சீட்டு எம்மிடம் இருக்கின்றது என்பது, எமக்கான பலம். அதனை நாம் கையிலெடுப்பதன் மூலம், சிறீலங்கா அரசைப் பணியவைக்கமுடியும். அதிசயிக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்த முடியும். சிங்கள இனவெறியர்களின் கொலைப் பிடியில் இருந்து எமது மக்களைக் காப்பாற்ற முடியும்.சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டமே அது!

ஏற்றுமதி வர்த்தகத்தில், எழுபது வீதமான பகுதியை, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலேயே சிறீலங்கா பூர்த்திசெய்கின்றது. தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளே, அதன் பணவேட்டைக்கான காடுகள். வர்த்தகச் செயற்பாடுகள், விமானச் சேவைகள், வங்கிச் சேவைகள் ஊடாக, சிறீலங்கா பெற்றுவரும் அந்நியநாட்டுப் பணமே, சிறீலங்காவின், குண்டு வீச்சு விமானங்களாகவும், பல்குழல் எறிகணை செலுத்திகளாகவும், பீரங்கிகளாகவும், யுத்தக் கப்பல்களாகவும், தமிழர்களை கொத்துக் கொத்தாய் அழிக்கும் கொத்துக் குண்டுகளாகவும், குண்டுகளாகவும், தோட்டாக்களாகவும், நாசகார ஆயுதங்களாகவும் சென்றடைகின்றன.

எமது உறவுகள், எமது குழந்தைகள், துண்டங்களாய் சிதைக்கும் கொடும் கரங்களில், அழிவாயுதங்களைக் கொடுப்பவர்களாக நாம் இருக்கின்றோம் என்ற உண்மையை நாம் உணர்கின்றோமா? தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ நாம் செய்யும் இந்த மோசமான காரியத்தை, இன்றே கைவிடவேண்டும். தனி மனிதர்களாக, தனித்துத் தனித்து... தயங்கித் தயங்கிச் சிந்தித்து, ஒன்றும் உருப்படியாக நடக்கப்போவதில்லை. ஏற்கெனவே இதுபோன்ற ஒரு கருத்துநிலை 2006ம் ஆண்டளவில் உருவானபோதும், அது செயலுருப் பெறவில்லை. தற்போது அவசரமாகச் தேவைப்படுவது கூட்டுச் செயற்பாடு.

இதில் வர்த்தக சமூகம், நுகர்வோர் சமூகம், ஊடக சமூகம் என்பன முழுமையான ஒத்த கருத்துடன் இணைந்து, எமது இனவிடுதலைக்கான போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய, தாக்கமான இந்தப் போர் வடிவத்தைக் கையிலெடுக்கவேண்டும். இதனை, நாம், பிரான்சில் தமிழர்களின் வணிக மையமாகக் கருதப்படும் லாச்சப்பலில் இருந்தே ஆரம்பிக்கலாம். தமிழ் மக்களின் விடுதலை வரலாறு எழுதப்படும் போது, லாச்சப்பலில் ஆரம்பித்து, உலகமெல்லாம் பற்றிப் படர்ந்த புறக்கணிப்புப் போராட்டம் என்ற குறிப்பு பதியப்படட்டும்.

இங்கே, இனவுணர்வுள்ள வர்த்தக சமூகம், வர்த்தக சங்கம் வாய்க்கப்பெற்றிருக்கின்றது. அண்மைக்காலமாக தமிழ் வர்த்தக சங்கத்தின் செயற்பாடுகள், போற்றுதற்குரியவை. பிரான்ஸ் வர்த்தக சமூகத்தின் தன்னெழுச்சியான செயற்பாடுகள், ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணமாய் அமைந்துள்ளன என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். மக்கள் கொதி நிலையில் இருக்கின்றார்கள். இன அழிப்பில் இருந்து எம்மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்ற அங்கலாய்ப்பில் இருக்கின்றார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாய், இளம் தலைமுறை, எழுச்சிகொண்டு நிற்கிறது.புலத்து மண்ணில் பிறந்து வளர்ந்த இளம் சந்ததி, தன் இனத்தின் பாரத்தை, தனது தோள்களில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்திருக்கின்றது. விட்டேந்தி விடலைகளாக, வம்பு பண்ணாமல், தியாகங்களைப் புரியத் தலைப்படுகின்றது. அர்ப்பணிப்பு மனோ நிலையுடன், ஒரு சந்ததித் தொடராய், போராட்டத்தை பாதுகாத்து முன்னே நகர்த்த முனைப்புடன் முன்நிற்கின்றனர். ஒழுக்கமும், நற்பண்புகளும், பொறுப்புணர்வும் மிக்க பிள்ளைகளைப் பெற்ற மனோநிலை, புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு.இவ்வளவும் போதும், நாம் வரலாறு படைக்க. எமது தாயக விடுதலைப் போராட்டம் வெற்றிபெறும். எமது விடுதலை இயக்கம், எமது மக்களுக்கான சுதந்திர வாழ்வை மீட்கும்.

உலகமெலாம் பரவிவாழும், தமிழர்கள், தமக்கான ஒரு நாட்டை அமைத்தே தீருவர். அதற்காக நாம் இன்றே கடமையில் இறங்குவோம்.வர்த்தக சங்கம், ஒரு ஒன்றிணைந்த அமைப்பாக இருப்பதால், எல்லா வர்த்தகர்களையும், இறக்குமதியாளர்களையும் ஒன்றாய் இணைத்து, சிறீலங்காப் பொருட்களை இறக்குமதி செய்வதில்லை, சிறீலங்காப் பொருட்களை விற்பதில்லை என்ற பொது முடிவை எடுக்கவேண்டும். இதற்கு மாற்று வியாபார முறைமைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.இதற்கு ஒரு மாத கால இடைவெளி கொடுத்து, சிறீலங்காப் பொருட்களை இறக்குவதையும், விற்பதையும் முற்றாக நிறுத்தவேண்டும். இந்தப் பொது முடிவுக்கு மாறாகச் செயற்படும், இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள் புறக்கணிக்கப்படவேண்டும்.(இதி
ல் தனிமனித பாதிப்புக்களைக் கருத்தில் எடுக்க முடியாது. இனத்தின் நலனே தற்போதைய நெருக்கடியான நிலையில் கருத்தில் எடுக்கப்படவேண்டியுள்ளது.)

இங்கு நுகர்வோர் சங்கம் இல்லாத காரணத்தால், பொதுமக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்த வேண்டியது, இளம் தலைமுறையின் கடமை. லாச்சப்பலில், பொழுது போக்கிற்காகக் கூடும், இளைஞர்கள் கூட, இந்தப் பணியை தன்னெழுச்சியாக மேற்கொள்ளமுடியும். எமது இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் வன்முறையற்ற, சுய ஒறுப்புப் போராட்டம். இதில் எந்தச் சட்ட மீறலுக்கும் இடமில்லை.

முப்பதுகளில், இந்திய தேசபிதா மகாத்மாகாந்தி பிரித்தானியர்களுக்கு எதிராக, துணிவகை உட்பட, இறக்குமதிப் போருட்களைக் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினார். கை றாட்டை கொண்டு, கதர் துணி தயாரித்தார். ஐம்பத்தைந்தில், அமெரிக்காவில், மாட்டின் லுாதர் கிங் தலைமையில் கறுப்பின மக்கள் அரச பஸ் போக்குவரத்துச் சேவையைப் புறக்கணித்தனர். கால்நடையாகவே பயணங்களை மேற்கொண்டனர். தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக, உலக நாடுகள், அந்நாட்டை புறக்கணித்தன (வர்த்தகம், விளையாட்டு உட்பட)ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை காரணம் காட்டி, மொஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியை, எண்பதாம் ஆண்டு அமெரிக்கா புறக்கணித்தது. எண்பத்தி நான்கில் லொஸ் ஏஞ்சலில் நடத்த ஒலிம்பிக் போட்டியை பதிலுக்கு சோவியத் யூனியன் புறக்கணித்தது. இஸ்ரவேலின் பலஸ்தீனத்துக்க எதிரான போரை எதிர்த்து, அரபு நாடுகள் ஒன்றிணைந்து, புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்தன. இஸ்ரேல் தயாரிப்புப் பொருட்களையும், இஸ்ரேலிய நிறுவனங்களால் பிற நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களையும் அவை புறக்கணித்தன.

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு, ஈராக் மீதான தமது யுத்தத்திற்கு துணைக்கு வரவில்லை என்ற கோபத்தில், அமெரிக்கர்கள் பிரெஞ்சிப் பொருட்களைப் புறக்கணித்தனர். பிரெஞ்சுத் தயாரிப்பு வைன் சீஸ் போன்றவற்றை அவர்கள், குப்பைத் தொட்டிகளில் வீசினர். அமெரிக்காவின் முஸ்லீம் நாடுகள் மீதான போர்களை எதிர்த்து, முஸ்லீம் மக்கள் கொக்கோகோலா பானத்தை புறக்கணித்தனர். அதற்குப் பதிலாக மெக்கா கோலா என்ற பானத்தை அறிமுகப்படுத்தினர். இப்படியாக, உலக வரலாறுகளில் புறக்கணிப்புப் போராட்டங்கள் பல நடந்திருக்கின்றன. நடந்துகொண்டிருக்கின்றன. அவை பல தாக்கமான அதிசயிக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுமிருக்கின்றன .நாமும், சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணித்து, வரலாற்றில் ஒரு தாக்கமான விளைவை ஏற்படுத்துவோமா? ஏற்படுத்துவோம்! என்று முடிவெடுத்துச் செயற்படுவோம்.

வாசகன்

சுப்பு

நன்றி ஈழமுரசு(2008)

Sunday, June 28, 2009

சின்னாபின்னமாகும் பெண்ணுரிமை!

ஆடைக்கட்டுபாடுகள் திணிக்கப்படும்போதெல்லாம் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்ணுரிமைப்பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள் பெண்கள். நாளேடுகளும் ஏதோ தங்களால் முடிந்த பெண்ணுரிமை கருத்துக்கள் என்று பெண்ணுரிமைக்கு போனஸாக மேலோட்டமாக பெண்ணியவாதிகள் கவிஞர்கள் கருத்துக்களை மேற்கோள் வைத்து எழுத்து வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள். அதை வைத்து ஒரு கூட்டம் காரசாரமாக விவாதத்தை தொடங்கும். நாலு பிரபலங்களிடம் பெண்ணுரிமைக் கேள்விகள் கேட்கப்படும். அதை வைத்து இன்னுங் கொஞ்ச நாள் பெண்ணுரிமை ஓடும். அப்பறமென்ன சிலநாட்களில் பெண்ணுரிமைகள் காணாமல் போய்விடும்.

ஆடைக்கட்டுப்பாடுகள் குறித்த பிரச்சனைகள் தமிழகத்தில் வரும்போதெல்லாம் தமிழகத்தில் இருக்கும் பெண்ணியவாதிகள் சில நாட்கள் எழுத்துப் போர் புரிவார்கள். ஏதோ அடக்குமுறை திணிப்பு உரிமைகள் ஒடுக்கப்படுகிறது விடமாட்டோம் என்று குதிப்பார்கள். அதுவும் வந்த வழி தெரியாமல் போய்விடும்.

சமூகத்தில் தினம் தினம் ஏதோ ஒர்வகையில் பிரச்சனைகள் பெண்களுக்கு இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. இருப்பினும் அவை சகிப்புத்தன்மையாக மாறிவிடுகிறது. ஆனால் ஒட்டு மொத்த பெண்களும் உடைக்கட்டுபாடு என்று வரும்போது மட்டும் பெண்ணுரிமை ஞாபகத்திற்கு வந்துவிடும்.

இது ஆணாதிக்க உலகம். இந்த ஆண்கள் பெண்களை அடக்கி ஒடுக்கி வைப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். அதனால் தான் எங்களால் ஒன்றையும் சாதிக்க முடியவில்லை என்று பெண்கள் குமுறுவார்கள். இது பெண்ணுரிமை கேட்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இதே பல்லவிதான் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் ஆணாதிக்கம் என்ற ஒரே பார்வையோடு விமர்சித்துக் கொண்டிருப்பதை விட்டு வேறு கோணத்தில் சிந்திக்க தோன்றுவதால் இந்த ஆணாதிக்கத்தை கொஞ்சம் ஓரங்கட்டி வைப்போம்.

பெண்களுக்குள்ளேயே ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் பல குழப்பங்கள் இருக்கிறது. புடவைகள் சுடிதார் பேண்ட் சர்ட் உடைகள் குறித்து பெண்களுக்குள் இருக்கும் விமர்சனங்களையும் ஒதுக்கி வைப்போம். குறிப்பாக கணவன் வருமானத்தில் ஜீவிக்கும் பெண்கள் நிலையை விட்டுவிடுவோம். அவர்களுக்கு ஏதோ வீட்டு வேலை பார்த்தோமா, சீரியல் பார்த்தோமா, கணவன் வருடத்திற்கு இரண்டு புடவையை எடுத்துக் கொடுத்தானா தின்னமா, தூங்கினோமா, அடுத்த வீட்டுக்காரியை பற்றி இன்னொருத்தியுடன் குறை சொல்லி காலத்தை ஓட்டினோமா என்று வாழ்ந்துவிட்டு போகும் ரகம்.

இன்னொரு பெண்கள் கூட்டம் இருக்கிறது. இலக்கியப் பெண் படைப்பாளிகள். இந்த அறிவு ஜீவிகளுக்குள்ளேயே பெண்ணிலைப்பாடுகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருக்கிறது. பழைய பஞ்சாங்கம் ஒருவகை என்றால் இன்னொன்று பெண்ணிய கட்டுடைப்புகளை எப்படி கட்டுடைப்பது என்பதில் சொதப்பும் வகை. கவிதையாலே பெண்ணியபுரட்சி நடத்திக் கொண்டிருப்பார்கள். உதவாக்கரைகள் ஒன்று சேர்ந்து மாதர் சங்கம் நடத்துவதைப் போன்றது. இந்தக் கூட்டத்தால் இளைஞிகள் பெண்ணுரிமையை தவறாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

சென்ற வருடம் கனடாவில் நடந்ததே ஒரு கூத்து.

தமிழ்பெண்கள் அமைப்பு நடத்திய பெண்ணுரிமை கூட்டம். உள்ளாடைப் புரட்சியில் பெண்ணுரிமை இருக்கிறதாம். ஜட்டி, பாடி எல்லாவற்றையும் தொங்கவிட்டு கூட்டம் போட்டார்கள். இந்த அமைப்புக்கு கலந்து கொள்ள வந்திருந்த தமிழ்நாட்டு இலக்கிய பெண்ணியவாதி ஒருவர் சொல்கிறார்: "பெண்ணுரிமை யோனி (பெண்குறி) கட்டுடைப்பில் இருக்கிறதாம்." இந்த பெண்ணியக்கூத்து இப்படியென்றால்....

இன்னொரு கூத்து இருக்கிறது.

அனேக திரைப்படங்களில் வரும் வசனம் தான். உதாரணத்திற்கு ´இளைய தளபதி என்னும் பொறம்போக்கு´ குடுத்த ஆக்ட்டுக்கு துட்டை சம்பாதித்துக் கொண்டு போவோம் என்றில்லாமல் பெண்களுக்கு பெண்ணுரிமையைப் பற்றி அடிக்கடி பாடமெடுக்கும் ரகம். (தமிழ் திரைப்படங்களில் எல்லா நடிகர்களும் பெண்ணுரிமைக் குறித்து பாடமெடுத்தாலும் இந்த பொறம்போக்குக்கு இளைஞிகள் அதிக விசிறிகளாக இருப்பதால் சுட்டிக்காட்ட முற்படுகிறோம்.)

ஆண்மொழியில் ஓர் பெண்ணிய விமர்சனம்!

பெண்களுக்கு முன் வைக்கப்படுகிறது. அதை பெண்ணிலைவாதிகள் எப்படி எதிர்கொண்டார்கள்?

பையன் ஏதோ நல்லவனாட்டம் இருக்கான். ரொம்ப பெண்ணுரிமையெல்லாம் அழகாக ஸ்டைலாக எடுத்துவிடுகிறான் என்று மெச்சிக் கொள்வார்களா?

பெரியார் சொல்வார் :

நம் தமிழ் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் மாபெருங்கேடாய் இருந்துவரும் மற்றொரு காரியம் சினிமா, நாடகம் முதலிய நடிப்புக் காட்சிகளாகும். இவை இசையைவிட கேடானவையாகும் என்பது என் கருத்து. நம் தமிழ்நாடு மானமுள்ள நாடாக, மானத்தில் கவலையுள்ள மக்களைக் கொண்ட நாடாக இருந்திருக்குமானால் இந்த நாடகம், சினிமா முதலியவை ஒழிந்து கல்லறைகளுக்குப் போயிருக்கும். இதை நான் வெகு காலமாகச் சொல்லி வருகிறேன். இசையினால் காது மூலம் உடலுக்கு விஷம் பாய்கிறது. நடிப்பினால் காது, கண் ஆகிய இரு கருவிகள் மூலம் உடலுக்குள் விஷம் பரவி இரத்தத்தில் கலந்து போகிறது. இவ்வளவு பெரிய குறைபாடும், இழிவும் உள்ள நாட்டுக்கும், மக்களுக்கும் இன்று கடவுள் பஜனையும், கடவுள் திருவிளையாடல் நடிப்பும்தானா விமோசனத்துக்கு வழியாய் இருக்க வேண்டும்?

நாடகம் எதற்கு? அது படிப்பிக்கும் படிப்பினை என்ன? அதற்காக ஏற்படும் செலவுகள் எவ்வளவு? புராணக் கதைகளை நடிப்பதினால் அனுபவிப்பதால் மூட நம்பிக்கை, ஒழுக்க ஈனம், கட்டுத்திட்டமற்ற காம உணர்ச்சி, கண்ட மாத்திரத்தில் காம நீர் சுரக்கும்படியாகப் பெண் மக்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளுதல் முதலியன பிடிபடுவதல்லாமல் வேறு என்ன ஏற்படுகிறது.

பெரியார்.
(தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு என்ற புத்தகத்தில் இருந்து. பக்கம் : 66)

இந்த சினிமாக்காரர்களால் சமூகத்தை குட்டிச்சுவராக ஆக்குவதைத் தவீர வேறு என்ன செய்திருக்கிறது? இப்படிப்பட்ட துறையைச் சார்ந்த ஒருவன் பொது மக்களில் ஒருபால் இனத்தினரை கேவலப்படுத்தி பேசினால் பொறுத்துக் கொண்டிருப்பதா? ஆனால் இதையெல்லாம் பெண்கள் பொறுத்துக் கொள்கிறார்களே!

குஷ்புக்கு துடைப்பக்கட்டையையும் செருப்பையும் தூக்கிக் கொண்டு போன பெண்கள் இளைய தளபதிக்கு தூக்கிக் கொண்டு போனால் அடுத்த படத்தில் அந்த பொடியன் பேசுவானா? "பொம்பளைக்கு அட்வைஸ் பண்ணிட்டு தோளும் தோளும் தான் உரசறா மேலும் கீழும்தான் இழுக்கிறா?"ன்னு டுயட் பாடுவானா?

நம் பெண்களிடம் எங்கேயோ கோளாறு இருக்கிறது. சகிப்புத்தன்மை மிகுந்து போயிருக்க வேண்டும். அல்லது இதுபோன்ற அட்வைஸ்சுக்களையும் திட்டுக்களையும் கேட்டு கேட்டு பழகிப் போய்விட்டதால் எவனோ ஒரு பொறம்போக்கு சொல்லும் போது இவன் என்னத்தை புதுசா சொல்லிட்டான்னு பெருந்தன்மையாக விட்டு கொடுத்துவிடுகிறார்களா என்பது நமக்கு புரியவில்லை.

இப்படி எல்லாத்துறைகளிலும் பெண்கள் அசிங்கப்பட்டு கொண்டிருக்கும் போது குறிப்பாக இளம் பெண்கள் (இவர்களில் அனோகர் பொறம்போக்குக்கு விசிறிகள் வேறு) அலட்சியமாக பார்த்து இரசித்துக் கொண்டிருந்துவிட்டு ஆடை கட்டுப்பாடுகள் என்று ஏதாவது பிரச்சனை வந்தால் போதும். பெண்ணுரிமை பெண்ணுரிமை என்பார்கள்?

எது பெண்ணுரிமை? மேக்கப் ஜாமான்களிலும், மாடல் உடையிலும் தான் இவர்கள் பெண்ணுரிமை பேசுகிறார்கள். இந்த அறியாமை எப்படி வந்தது இவர்களுக்கு..

எத்தனை பெண்களுக்கு பெண்ணுரிமை என்றால் தெரிகிறது?

சமீபத்தில் மரணமடைந்த கமலா தாஸ் என்ற பெண்ணிய இலக்கியவாதியைப்பற்றி சக ஆண் இலக்கியவாதியான எழுத்தாளர்
ஜெமோகன் சொல்கிறார்

“கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுக்கண் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.”

எவ்வளவு வக்கீரம் பிடித்த விமர்சனம். எத்தனை பெண்கள் எதிர்த்தார்கள்? பிரபலான பெண்ணிய எழுதாளரின் மரணத்தில் இப்படியொரு அடையாளத்துடன் பெண்ணிய எழுத்துக்கள் விமர்சிக்கப்படும் போக்கு ஐரோப்பாவில் நடந்திருந்திருந்தால் பெண்ணியவாதிகள் ஒரு பிடிபிடித்து மானநஷ்ட வழக்கு போட்டிருந்திருப்பார்கள்.

மானமாவது மசுறாவது அதெல்லாம் எங்களுக்கு கிடையாது என்றால் எப்போதாவது வரும் உடைக்கட்டுப்பாடு பிரச்சனையில் மட்டும் பெண்ணுரிமை பற்றி பேசிவிட்டு போக வேண்டியது தான். அதிலாவது உருப்படியான செயல்பாடுகளை பெண்ணிலைவாதிகளால் எடுக்க முடிகிறதா? சும்மா புலம்புவதிலும் கவிதை எழுதுவதிலும் உரிமை பேசிவிட்டு போய்விடுவார்கள். எத்தனை பேர் செயலில் இறங்கி கடைசி வரை போராடி வெல்கிறார்கள்?

ஆறுகோடி தமிழர்களிடையே 3-கோடி தமிழ்பெண்கள் இருந்தால் கூட தமிழகத்தில் இதுவரையில் உருப்படியான பெண்ணிய சிந்தனைகளை செயல்படுத்திய பெண்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?

எப்போதும் பெண்ணுரிமைகளில் தெளிவான நிலைப்பாடுகளோ உறுதியான போராட்டங்களோடு போராடி பெண்களுக்கு தேவையான உரிமைகளை பெண்களே வென்றெடுக்காமல் அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கும் வரையில் பெண்ணுரிமையின் சித்தாந்தம் போலித் தன்மையில் இயங்கிக் கொண்டு பெண்களாலேயே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும்.

நன்றி தமிழச்சி

Wednesday, June 24, 2009

இந்திய அரசியல்-தமிழக இந்திய அரசியல் வியாதிகள்-மக்கள் போராட்டம் -ஒர் பார்வை

மக்கள் போராட்டம்:(உண்ணா விரதம்-பேரணி -பொது கூட்டம்- சாலை மறியல்-தீக்குளிப்பு)
தெரிந்தோ தெரியாமலே இந்த இந்தி தேசியத்தில் உள்வாங்க பட்ட தமிழர்களாகிய நாம் இதை செய்தால் அரசாங்கம் நம்மை கண்டுகொள்ளும் ஏதாவது செய்யும் என பழக்கபடுத்திவிட்டார்கள். இன்று அந்த பழக்கமே மக்களிடம் மேலோங்கி உள்ளது. ஆனால் முக்கிய பிரச்சனைகளில் அதாவது இனம் சார்ந்த பிரச்சனைகளில் இதுவும் செல்லுபடியாகாது என ஈழ பிரச்சனையில் நாம் கண்டு கொண்டோம். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் எவனும் கண்டு கொள்ளவில்லை.ஏதோ காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தார் தமிழக விவசாயிகள் கோவணத்தோடு இருப்பதை கண்டு தானும் கோவணத்தினை உடுத்தி கொண்டார் ..அவர் அறிமுகபடுத்தியது தான் அகி’இம்சை’வழி என அதை பின்பற்றுதலை நிறுத்தி கொள்ள் வேண்டும். எங்கோ ஒரு சீக்கிய சாமியார் கொலை செய்யபட்டதால் மொத்த பஞ்சாப்பும் தீப்பற்றி கொண்டதே ஏன்? எவனோ செய்த கொலைக்கு பிரதமர் வரை மன்னிப்பு கேட்டரே? 50.000 மேற்பட்ட மக்கள் இந்தியா ஆசியுடன் கொன்றொழிக்கபட்டதிற்கு மன்னிப்பு கேட்பாரா?
மாற்றத்திற்கான வழி:
மக்கள் போராட்டம் என்பது இந்த இம்சை பாதையை
விட்டு வெளியில் வரவேண்டும் டெல்லி வாலாக்கள் செவுளில் நாலு அறைந்தாற்போன்று இருக்கவேண்டும். தமிழக மக்கள் தங்கள் போராட்ட பாதையை மாற்ற வேண்டும்!
இந்தி அரசியல் வியாதிகள்(கவலையளிக்கிறது-வருத்தமளிக்கிறது- நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம்)
இந்த மேற்கூறிய வாசகங்களை படித்தாலே முழு அரசியல்வியாதிகள் ஆகிவிடலாம்.உண்மையில் இந்த இந்திகாரன்கள் தங்கள் மாநிலங்களின் பிரச்சனைக்கோ அல்லது தங்களது சமூகத்தவர்களுக்கு வெளி நாடுகளில் ஏற்படும் பிரச்சனைக்கோ இந்த சொல்லை உபயோகிப்பது இல்லை. நேரடியாக செயலில் இறங்குவதுதான் இவர்களது பாலிசி.மலெசிய தமிழர் போராட்டதில்
இருந்து வளைகுடா நாடுகளில் தமிழர்கள் சிறையில் வாடிய போதும் இவர்கள் கூறியது மேற்கூறியவார்தைகள் தான். அதாவது இவர்களுக்கு அன்னிய செலவாணியை ஈட்டி தரும் எ.டி.எம் மிஷின் தானே தமிழர்கள்!தமிழீழத்தில் இருந்து தினம் தினம் 100க்கும் மேல் நமது உறவுகளை குண்டு வீசி கொலை செய்யும் இலங்கை அரசினை கண்டித்தும் அதற்கு முண்டு கொடுக்கும் இந்தி அரசினை கண்டித்தும் இங்கு கக்கூசு கழுவுபவர்கள் முதல் காய்கறி கடைக்காரர்கள் வரை போராடி பார்த்தாகிவிட்டது ஆனால் இந்தி அரசு இம்மியளவும் நகர்கிற வழி தெரியவில்லை.தமிழினத்தின்
இந்த நிலைமைக்கு காரணம் என்ன?இந்தி அரசின் சட்டதிட்டங்களும் மற்றும் அதை நடைமுறைபடுத்தும் இந்திய ஆட்சியாளர்களே ஆகும்!
இந்த இந்தி ஆட்சியமைப்பு முறையில் சராசரி ஒரு சிங்கும் ஒரு தமிழனும் ஒரு கோரிக்கை மனுவோடு புதுடெல்லியில் உள்ள எதாவது ஒரு மத்திய அரசின் அமைச்சகத்தின் முன் நிற்கட்டும் யாருடைய மனு முதலில் பரிசீலிக்கபடும் என்பது நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை…ஏன் தமிழனுக்கு இந்திகாரனிடம் கெஞ்சி கூத்தாட வேண்டிய நிலைமை?எத்தனை சிங்குகள் மலையாளிகள் இப்போது அவர்கள் கோரிக்கைக்காக
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்?

மாற்றத்திற்கான வழி:
சுயநலமற்ற தலைவர்களை எம்.பிக்களாக தேர்ந்தெடுப்பது.. வெளியுறவு மற்றும் முக்கிய பதவிகளை கேட்டு பெறுவது.. அதே பாணியை நாமும் பின்பற்ற வேண்டும் ..சில காலத்திற்காவது அவர்களை முக்கிய பிரச்சனைகளில் காக்க வைக்கவேண்டும். அப்போதுதான் நாமும் மனிதர்கள் என உணர்வார்கள்.நம்முடைய வேதனையும் வலியும் அவர்களுக்கு புரியும்.

தமிழக அரசியல் வியாதிகள்:(தந்தி-தபால்-பொதுகுழு- செயற்குழு -அனைத்துகட்சி கூட்டம்-மத்திய அரசிற்கு தீர்மானம்)
தமிழக அரசியல் வியாதியாவதற்கு மேற்குறியவைகள் இருந்தால் போதும் வியாதி ஆகிவிடலாம் எவன் தமிழ்நாட்டில் இருந்து தந்தியடித்தாலும் அது எங்கு செல்லும் என இங்குள்ள வியாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.. ஆகா தமிழ்நாட்டில் இருந்து தந்தி தபால் வந்ததா.. மிளகாய் பஜ்ஜியை அதில் வைத்து சாப்பிடுவோம் என இந்திகாரன் சாப்பிடுவான் என அனைவருக்கும் தெரியும்.ஆனாலும் ஏன் அதையே தொடர்ந்து செய்கிறார்கள்?இது புரியாமாலா இங்கு கட்சி நடத்தி கொண்டு உள்ளார்கள்? இது அவர்களுக்கும் தெரியும்!பாக் சல சந்தியின் அந்தபுரம் இருந்தாலேன்ன இந்த புறம் இருந்தாலென்ன?தமிழர்கள் எதிரிகளே என இந்தி அரசு செயல்படுகிறதுஇவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை ஏற்படுகின்றன.. புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!

சரி இவர்களை மாற்ற என்ன வழி?
1)ஒரு மாதம் இன உணர்வை கற்க சிங்களவனிடமோ அல்லது மாராத்திகாரனிடமோ அல்லது கன்னடகாரனிடமோ ஒரு புரோகிறாம் போல செட் பண்ணி அனுப்பி வைக்கலாம்.
2)மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் உடன் அனுப்பலாம்..
3)தமிழ் ரத்தம் ஓடுகிறதா என ப்ள்ட் செக்கப் செய்யலாம்..
4)தமிழர் வேறு மாநிலங்களில் தாக்கபடும் போது மக்கள்காவல் படையாக தமிழர்களை காக்க இவர்களை நியமிக்கலாம்.
5)வடக்கத்தியானுக்கு விளக்கு பிடிக்கும் வேலைக்கு நியமிக்கலாம்..
6)இந்தி கம் தமிழ் டிரான்சுலேட்டராக கூலி வேலைக்கு நியமிக்கலாம் அப்போது தான் தமிழர்களை எப்படி மதிக்கிறார்கள் என தெரியவரும்–இத்தனைக்கு பிறகும் இவர்கள் சரிவர வில்லை என்றால் மொத்த ரத்ததையும் உறிஞ்சிவிட்டு இந்திகாரன் ரத்ததை ஏற்ற வேண்டும்!மக்களுக்காக:(மானாட மார்பாட- கலக்க போவது யாரு-
சீரியல்கள்-இலவசங்கள்)தமிழக மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பி விட மாட்டார்கள். அப்படித் திரும்பாத வேலையைத் ஒருவருக்கு ஒருவர் கழுதறுத்து தமிழகத் திராவிடக் கட்சிகளே அவற்றின் ‘தொல்லை’காட்சிகளே பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கையிலும் தெம்பிலும்தான், இவர்கள் தமிழர் பிரச்சினைகளை பற்றி கவலைப் படாமலும், அதில் அக்கறை காட்டாமலம் இருப்பது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிராகவும் இந்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.குறைந்த பட்சம் நம்முடைய தாய்மார்களுக்கு குடிசை தொழில் அல்லது நடுத்தர வர்க்கமானல் இணையத்தின் வழி எத்தனையோ முறைகளில் சம்பாதிக்க வழி உள்ளது. அவற்றினை கற்று கொடுங்கள்.இந்த சீரியல்கள் மற்றும் பிற ஈழவுகளில் இருந்து விடுபட செய்யுங்கள்.மராத்திய வீரன் சிவாஜியை அவனுடைய தாயார் உருவாக்கியது போன்று நம்முடைய தமிழ்நாட்டிலும் ஒரு இனத்திற்காக போராடும் ஒப்பற்ற வீரனை நம்முடைய தாய்மார்களாலும் உருவாக்க முடியும்.ஒரு சீக்கிய இனத்திற்காக போராடிய பிந்துவாலேவிற்காக ..எங்கே நம்மை விட்டு பிரிந்து போய்விடுவார்களோ என இந்தி அரசு அவர்களை கண்டால் நடுங்குகிறது. எதிரியே நமது ஆயுதத்தை தீர்மானிக்கிறான். எந்த காரணம் சொல்லி இந்த அரசு ஈழ தமிழர்களை கொன்று ஒழித்ததோ அதே ஆயுதத்தை நாமும் ஏந்துவோம் ! நம்முடைய பிரச்சனைகளுக்கு, ஈழ தமிழரின் வாழ்வுரிமைக்ககும்!!

Tuesday, June 23, 2009

இனிவரும் போர்...?

வணக்கம்
அன்பான ஊடக நண்பர்களே, தமிழ் உறவுகளே..!!!!விவாதங்களும்,குழப்பங்களும்,சலசலப்புகளுமாய் ஓடும் தமிழினத்தின் கால ஓட்டத்தில் அதன் தேவை அறிந்து உணர்வுகளை சொல்ல வருகிறான் "பருத்தியன்".அவன் உணர்வுகள் உங்களின் மனதை தொட்டால் மற்றவர்களும் அறியும்படி செய்யுங்கள்.
நன்றி
கௌதம் ராஜா..

இனிவரும் போர்...?
ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம் தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.
உலகநீதி கூறுவோரினதும்... மனிதாபிமானம்,மனிதநேயம் பற்றி பேசுவோரினதும்... காந்தியம்,அகிம்சை,கொல்லாமை பற்றி வாய்கிழிய கத்துவோர்களினதும் முன்னிலையில், அவர்களின் ஆசீர்வாதத்துடனும் முழு ஒத்துழைப்புடனும் தமிழினம் மிகக் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டதென்பது மனிதகுலமே வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம்.
அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா அவர்கள் ஒரு ஈயை தன் கையால் அடித்துக் கொன்றுவிட்டார் என்பதற்காக அமெரிக்க ஜனாதிபதிக்கெதிராகவே கண்டனங்கள் தெரிவித்த இரக்கமிக்கவர்களின் கண்களுக்கு, ஈழத்தமிழர்கள் துடிதுடிக்க கொன்றொழிக்கப்பட்டது தெரியவில்லையா? அல்லது ஒரு ஈயை விடக் கேவலமானவர்கள் தமிழர்கள் எனக்கருதி அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையா???

விலங்குகளைக் கூண்டுகளில் அடைத்து வைத்து அவற்றின் சுதந்திரத்தினைப் பறிப்பதற்கே பாய்ந்தடித்து,பதறியடித்துக் கொண்டு கண்டன அறிக்கைகள் விடும் ஈரநெஞ்சத்தவர்கள் , புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் சிங்கள அரசின் கொலைக்கூண்டுகளில் எந்த அடிப்படை வசதியுமின்றி, சுதந்திரமுமின்றி அடைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படும் அப்பாவித் தமிழர்கள் விடயத்தினைக் கண்டுகொள்ளாமல் கல்நெஞ்சக்காரர்களாக இன்னும் இருப்பது ஏன்???

இவை மட்டுமல்ல... பல்வேறு சந்தர்ப்பங்கள், சம்பவங்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது... ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்த சர்வதேசத்தினாலும் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெட்டத்தெளிவாகின்றது.பாரபட்சமான உலகநீதிக்குள் பழிவாங்கப்பட்டிருக்கின்றது ஈழத்தமிழினம்.
தமிழர்களிற்கு அழிவை ஏற்படுத்தியவர்கள் வெளிப்படையான குற்றவாளிகள் என்றால், அதைத் தடுக்க வழிகள் இருந்தும் அதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மறைமுகமான குற்றவாளிகளே!.

வல்லரசு வல்லூறுகளின் பிராந்திய வல்லாதிக்கப் போட்டிகளின் நடுவே சிக்குண்டு சின்னாபின்னமாகிப் போனது ஈழத் தமிழரின் வாழ்வு. வளமாய் வாழ்ந்த இனம் இன்று தன் வாழ்வைத் தொலைத்து நிற்கின்றது.

இந்தியா,சீனா,ரஷ்யா,அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் சுயநலன்களுக்கு அப்பாவித் தமிழினம் இரையாகி இழந்தது அதிகம்.

குறிப்பாக இந்தியாவின் பழிவாங்கல் துரோகத்தனத்தினை என்றுமே ஈழத்தமிழினம் மறக்காது, மன்னிக்காது. அரவணைக்கும் என்று நம்பியிருந்தவர்களின் எதிபார்ப்பையும் எதிர்காலத்தையும் அழித்தொழிக்க சிங்களத்தோடு கூடிநின்று குழிபறித்தது.சந்தர்ப்பம் பார்த்து ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தியது.சிங்களவெறியர்களின் கொலைவெறியாட்டத்தினை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது சோனியா அம்மையார் தலைமையிலான இந்தியக்காங்கிரஸ்அரசு. புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை நினைத்து அகமகிழ்ந்து தன் கணவர் இராஜீவ் காந்தியின் சமாதியில் கடந்த மே 21 இல் அவரது நினைவு தினத்தன்று மனநிறைவோடு அஞ்சலி செலுத்தினாராம்.
அதற்கு அவர் பலியெடுத்த அப்பாவித் தமிழ்மக்களின் உயிர்கள்தான் எத்தனை ஆயிரம்?
அதைவிட சீனாவின் ஆதிக்கப் போட்டியார்வத்தில் அது சிங்களத்துக்கு அள்ளிக் கொடுத்த கொத்துக் குண்டுகளில் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டது தமிழினம். "பொய்வித்தை வியாபாரி" சீனாவின் வர்த்தக, வல்லாதிக்க நோக்கத்தினால் நொடிக்கப்பட்டது அப்பாவித் தமிழினந்தான்.
இவையோடு சேர்த்து ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் தென்னாசிய நாடுகள் பலவும் சிங்களத்தோடு கூட்டுச் சேர்ந்து ஈழத்தமிழரின் குரல்வளையறுக்க கூடித் திட்டம் போட்டன.

அமெரிக்காவும்,மேற்குலக நாடுகளும் இதில் குறைவைக்கவில்லை. அவையும் தம் பங்கிற்கு தமது அதிகாரத்தினை ஆசியப் பிராந்தியத்தில் நிலைநிறுத்த தம்நிலை மறந்து தாளம் போட்டன. இவர்களின் இரட்டை வேட நாடகங்களின் மத்தியில் தன் கொலைவெறியாட்டத்தினை கச்சிதமாக நடத்தி முடித்திருந்தது சிங்களம்.

பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்களைக் கொன்று குவித்த பின்னரும் சிங்களத்தின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை.
தினமும் கொலைகள்,கடத்தல்கள்,காணாமல்போதல்கள்,கைதுகள்,
சித்திரவதைகள் என்பன இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஈழத்தமிழரின் பாரம்பரிய விழுமியங்கள், அடையாளங்களை இல்லாதொழிப்பதில் சிங்களம் கருத்தாய் செயற்படத் தொடங்கியிருக்கின்றது. தமிழ்மக்களின் பிரதேசங்களை பெளத்த சிங்கள மயமாக்குவதுடன், தமிழர்களுக்கான ஒரு ஆளுமைமிக்க தலைமையை இல்லாமற் செய்வதன்மூலம் தமிழர் என்ற தனித்துவத்தினை,அதிகார பிரதிநிதித்துவத்தினை இழக்கச் செய்வதும், இளம் சமுதாயத்தினர் மத்தியில் கலாச்சாரச் சீரழிவினை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ் விடுதலையுணர்வை அடியோடு இல்லாமற் செய்வதற்கும் முன்னெடுப்புக்கள் நடக்கின்றன.

மொத்தத்தில் இலங்கையில் தமிழினம் என்பது ஒரு தனித்துவ அடையாளமில்லாத அடிமைப்படுத்தப்பட்ட இனமாக ஆக்கப்படக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. இதையெல்லாம் மீறி தமிழினத்தின்பால் அக்கறைகொண்டு சுதந்திரமிக்க நியாயமான தீர்வொன்றை சிங்கள பேரினவாதிகளிடமிருந்து எதிர்பார்த்தோமானால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவுமில்லை.
இவ்வாறான கீழ்த்தரமான நிலைமை ஈழத்தமிழினத்திற்கு வராமல் தடுக்க என்ன வழி?
ஈழத்தமிழர்கள் அகிம்சை வழியில் போராடி முடியாமல் போக, ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று முடிவெடுத்து இற்றைக்கு முப்பது வருடங்களுக்கும் மேலாக போராடி ஒன்றரை இலட்சத்துக்கு மேலான மக்களையும், முப்பதினாயிரத்துக்கும் மேலான விடுதலைப் போராளிகளையும் இழந்தும் சர்வதேசத்தின் கரிசனை ஈழத்தமிழர்மீது முழுமையாக ஏற்படாத நிலையில், இவ்வளவு காலமாய் ஈழத் தமிழரை தலைநிமிர்ந்து நடக்க வைத்த ஆயுத்தப் போராட்டமும் முடிவடைந்து விட்டதான கருத்து எல்லாமட்டத்திலும் எழுந்து வருகின்றது.
ஆயுதப் போராட்டம் இனிமேலும் தொடரப்படுவதற்கும் இனி சாத்தியக் கூறுகள் இல்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது. இவற்றின் உண்மைத்தன்மைபற்றியும், இக்கருத்தினை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்களின் வாதப் பிரதிவாதங்களையும் தாண்டி இனிமேல் தமிழர்களின் போராட்டம் எந்த வழியில், யார் தலைமையில் தொடரப் போகின்றது?
அது எவ்வகையான போராட்டமாக அமையும் அல்லது அமையவேண்டும்?
தற்போதைய தோல்விகளின் பின் முன்னெடுக்கப்படும் போராட்டம் எந்தளவுக்கு வெற்றியளிக்கும் ?
தனி ஈழம் என்ற இலட்சியத்தினையும் நியாயமான தீர்வினையும் அதன்மூலம் அடைய முடியுமா? என பலவாறான கேள்விகள் வரிசையாகக் காத்திருக்கின்றன.
ஆனால், கேள்விகள், விவாதங்களைத் தவிர்த்து காலவோட்டத்தில் நமது இலட்சியப் பாதையில் தடைகளைக் கடந்து பயணிக்கவேண்டிய காலக்கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம். இங்கு கேள்விகளுக்கோ அல்லது விவாதங்களுக்கோ இடமளிக்கக் கூடாது. இதுவரைகாலமும் நமது தேசியத்தலைவரின் தலைமையில் புலிகள் நமக்காக போராடியிருந்தார்கள், இப்போது நாமே நமது உரிமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் நிற்கின்றோம். காலத்தின் , சந்தர்ப்ப
சூழலின் தேவையறிந்து இப்படியான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் அர்த்தம் புலிகள் முற்றாக அழிந்து விட்டார்கள் என்பதல்ல. அவர்கள் போராட்டங்களிலிருந்து முற்றாக ஒதுங்கி விட்டார்கள் என்பதல்ல. அவர்களுக்குரிய இடைவேளையிது. இப்போது போராட்டம் தமிழ்மக்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீண்டும் வரவேண்டும் என கால நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நிச்சயம் மீண்டும் வருவார்கள். ஆனால் அதை தீர்மானிக்கப் போவது, உங்கள் கைகளிலும் சர்வதேசத்தின் கைகளிலும்தான் உள்ளது. எங்களது போராட்டம்தான் எங்கள் உறவுகளை சிறைக் கூண்டுகளிலிருந்து விடுவிக்கும், காப்பாற்றும். எங்கள் உரிமைகளை எங்களுக்குப் பெற்றுத்தரும்.புலிகள் தற்காலிகமாக ஒதுங்கிக் கொண்டதன்மூலம் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டிய பொறுப்பை சர்வதேசத்தின் தலையில் போட்டிருக்கின்றார்கள். சர்வதேசம் அதை விரும்பியோ விரும்பாமலோ செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயத்தினை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.தொடரும் எங்கள் போராட்டங்கள் அதனை அவர்களுக்கு மேலும் வலியுறுத்தும்.
அதை நாம் செய்ய வேண்டியது நமது தலையாய கடமை. இன்றைக்கு உலக நாடுகள் கொஞ்சமேனும் ஈழமக்களுக்காக குரல்கொடுக்கின்றது என்றால் அது புலம்பெயர் தமிழ்மக்களின் போராட்டங்களினால்தான். இந்நிலையில் நமது ஒற்றுமையைத் தொலைத்துவிட்டு நமக்குள் நாமே கருத்துப்பிளவுபட்டுக் கொள்வதில் எந்த அர்த்தமுமில்லை... பிரயோசனமுமில்லை.
வெளிவரும் செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் காலம் தன் பாதையில் அனைத்தையும் வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையில் நாம் நமது கடமையை தொடர்ந்து செய்ய வேண்டும். அதிகாரபூர்வமற்ற அநாமதேய அறிக்கைகளைக் கண்டு மனமுடைந்து சோர்ந்து போகாமல் நமது தலைவனின் வரவுகாய் காத்திருப்போம்! அதுவரை விடியலின் வரவுக்காய் உழைத்திடுவோம்!

சர்வதேசத்தினை நோக்கி தமிழர்தரப்பு தொடங்கியிருக்கும் இராஜதந்திரப் போரினால் சிங்கள அரசு பலத்த அடிவாங்கப் போகின்றது என்பது நிச்சயம். ஆனால் இதனை வார்த்தைகளில் மட்டும் சொல்லிகொண்டிருக்காமல் நமது போராட்டங்கள் செயன்முறைகள் மூலம் அமுல்படுத்துவதன் மூலமே அடையமுடியும்.ஒற்றுமை என்பதை நமக்குள் உள்வாங்கி ஓரணியில் திரண்டு ஒருமித்த குரலில் நம் உறவுகளுக்காகவும்,நம் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போமானால் வெற்றி என்றுமே நம் பக்கத்தில் மட்டுமே இருக்கும்.
இருக்கும் - இருக்காது, நடக்கும் - நடக்காது , இருக்கின்றார் - இல்லை என்ற தேவையில்லாத விவாதங்களை முற்றாகத் தவிர்த்துவிட்டு நமது வரலாற்றுக் கடமையை நாம் தவறாது செய்வோம்.காலம் எல்லாவற்றையும் நமக்கு வெளிப்படுத்தும். அதுவரை நம்மை முற்றுமுழுவதுமாக அர்ப்பணிப்போம் நம் தேசத்தின் விடிவுக்காக.
தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் வெளிவரும் செய்திகளின் பின்னணியில் பல ராஜதந்திர நகர்வுகள் இருப்பதாகவே தென்படுகின்றது.அந்த நகர்வுகளின் நகர்வுகளை நமது போராட்டத்தினைப் பற்றி முழுமையாகப் புரிந்து வைத்திருப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். போர்வெற்றிகள் தீர்மானிக்க முடியாத தீர்வினை இராஜதந்திர வெற்றிகள் தீர்மானிக்கும்.கடந்த காலங்களில் விடப்பட்ட இராஜதந்திர இடைவெளிகளை இம்முறை தமிழர் தரப்பு சரிவர நிவர்த்திசெய்யும். இதன் ஆரம்பப் படிகளாக முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒருசில விடயங்களினாலேயே சிங்கள அரசு பயங்கொள்ளத் தொடங்கிவிட்டது எனில், இந்த இராஜதந்திரப்போராட்டம் இன்னும் பல அதிசயங்களை தமிழர்களுக்காக செய்வதற்கு காத்திருக்கின்றது.இவ்வாறான இராஜதந்திரப் போருக்கு உலகம் பூராவுமுள்ள தமிழர்களின் ஆதரவு மிக மிக அவசியம். ஆதலால் நமக்குள் உள்ள கருத்துவேற்றுமைகளை மறந்து ஒன்றாய் களம் புகுவோம்.வென்று தலை நிமிர்வோம்!
இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்...
இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்...
வாழுகின்ற நம் தலைவனை மீண்டும் வராமலே வைத்துவிடும்.

தலைவரின் வழிகாட்டல்கள் இப்போதைக்கு மறைமுகமாகவே நம்மை வந்து சேரும்.
எனவே உண்மையறிந்து,களமறிந்து,காலமறிந்து நாம் களம் புகுவோம்! இனிவரும் போர்... இராஜதந்திரப்போர்!
-பருத்தியன்-
தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்

Thursday, April 30, 2009

மே தின வரலாறு

தொழிலாளர் போராட்டம்

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

பிரான்சில் தொழிலாளர் இயக்கம்

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

ரஷ்யாவில் மே தினம்

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில்

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.

சிக்காகோ பேரெழுச்சி

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் கறுப்பு தினம்

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

அனைத்து நாடுகளிலும் மே தினம்

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

Monday, March 23, 2009

தமிழ் துரோக தலைவர்கள்

தமிழ் துரோக தலைவர்கள்: ஈழ மக்களின் பிரச்சனைகள் வரும் தேர்தலில் எதிரொலிக்காது.1967 -இல் தமிழர்களுக்காக ஹிந்தி எதிர்ப்பு பிரச்னை செய்து பலர் மாண்ட போது, அதை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் இந்த தலைவர்கள்.ஆனால் இவர்கள் தம் உறவுகளை மட்டும் ஹிந்தி படிக்க சொன்னது தனி கதை.ஹிந்தி மொழியையும் கற்போம், தமிழ் பெயரை சொல்லி நம்மை ஏமாற்றி வரும் கையாலாகத,கண்டன அறிக்கைகளை மட்டும் விடும், தமிழ் துரோகிகளை புறம் தள்ளுவோம்.
ராஜபக்சே-வின் நோக்கம் எல்லாம் தமிழினத்தை அழிக்க வேண்டும் என்பதுதான், இதை அறிந்திருந்தும் நீங்கள் அவன் கூட சேர்ந்து கை-குளுக்குகிரிர்கள், ஆயுதங்களை கொடுத்து தமிழர்களை கொல்ல சொல்கிறிர்கள்,தமிழர்களை கொள்வது தான் உங்கள் திட்டம் என்றால் அதை வெளிபடையாக சொல்லிவிட்டு கொல்லுங்கள்,அதை விட்டுவிட்டு ஐயகோ தமிழினம் அழிகிறதே, சட்டசபை-இல் திர்மானம், MP-க்கள் ராஜினமா, மத்திய அரசை கண்டித்து தந்தி, 48 மணி நேரம் எங்களால் தான் போர் நிறுத்தம் வந்தது, நாங்கள் அதை செய்தோம் நாங்கள் இதை செய்தோம் என்று "எழவு வீட்டில் ஒப்புக்கு ஒப்பாரி வைக்காதிர்கள். உலக தமிழனுக்கே தெரியும் நீங்கள் கொடுத்த குண்டுகளும் தான் ஈழத்தில் தமிழனை கொல்கிறது என்று.நம் இனத்தை அழிக்கும் ராஜபக்சே மட்டும் கொலைகாரன் அல்ல அவனுக்கு ஆயுதங்களை கொடுத்து, வீரர்களை கொடுத்து தமிழினத்தை அழிக்க சொல்லும் ஒவ்வொரு இந்தியனாகிய தமிழனும்-தான்(நான் உள்பட).
மீனவர்களின் துயரங்கள் எல்லாம் உங்களுக்கு எங்கு தெரியபோகிறது, உங்களை சொல்லியும் குற்றமில்லை,பாவம் நீங்கள் உங்கள் தொழில்சாலைகளின் வேலைகள்,கல்லுரி நிர்வாகம், பல புதிய தொலைக்காட்சிகள் தொடக்க வேலைகள்,பாராட்டு விழாக்கள் மற்றும் பல்வேறு விழாக்களில் இடுபடவே நேரம் இல்லை இதையும் தாண்டி நேரம் இருந்தால் சுவிஸ் பேங்க் அக்கௌன்ட் ஒபெநிங் என்று சிலர் பிஸி ஆகி விடுகிறிர்கள்,.அன்று கட்ச-தீவை தாரை வார்த்து கொடுத்து மீனவர்களின் வாழ்வில் தெரு-புழுதியை அள்ளி போட்டிர்கள்,இன்று அதில் கொலைகார ராஜபக்சே கட்டிடங்களை கட்ட போகிறானாம்,இன்று கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் சென்றால் ஸ்ரீலங்கா அரசு சுட்டு கொல்கிறது, அதற்க்கு நீங்கள் கவலை படவேண்டிய அவசியமே இல்லையே என்னென்றால் உங்களிடம்-தான் கண்டன அறிக்கைகள் இருக்கிறதே அதை ஒற்றை விட வேண்டியதுதானே.மக்களின் உயிர்-ரை கூட அரசிலாக்கும் ஒரே இனம் நம் தமிழினம் தான்.ராஜராஜ சோழனையும்,சேரன் செங்குட்டுவனையும்,பொற்கை பாண்டியனையும்,மனுநிதி சோழனையும் சொன்ன நமது வரலாறு, பதவிக்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கும் உங்களை நிச்சயம் காரி-துப்பமல் விடாது.ஈழத்தில் நடக்கும் செய்திகள் தமிழ்நாட்டில் மறைக்கபடுகின்றன.செய்திகளை மறைத்தால் அது செய்தி இல்லாமல் ஆகிவிடுமா?அன்புள்ள செய்தி உடகங்களே நீங்கள் செய்திகளை மறைத்தல் மக்களிடம் இருந்து மறைந்து விடுவிர்கள் என்பது நிதர்சனமான உண்மை.சிலர் டாய்லட் போவதைக்கூட செய்தியாக சொல்லும் தொலைக்காட்சிகள், எம் மக்கள் பதுங்கு குழிகளில் புதைவதை ஏன் சொல்ல மறுக்கின்றன.
தமிழக அரசியல்வாதிகளே, நீங்கள் ஒரு பினதின்னி கழுகுகள், நீங்கள் ஒரு வேடதாரிகள், நீங்கள் ஒரு பதவி வெறியன்கள், நீங்கள் ஒரு கொள்ளைகாரர்கள், நீங்கள் ஒரு தமிழின கொலைகாரர்கள், நீங்கள் ஒரு ராஜபக்சேவின் கைகூலிகள்....., என்று எதிர்காலம் உங்களை சொல்லும். கொடுங்கள் கொடுங்கள் ஆயுதங்களை எல்லாம் கொடுத்து தமிழர்களை கொல்ல சொல்லுங்கள், ஆனால் நீங்கள் மட்டும் ஒருநாள் சாகமலா இருக்க போகிறிர்கள் அன்று உலக தமிழர்களே வெடிவெடித்து கொண்டாடுவார்கள் பல்லாண்டு வாழ்ந்து என்றாவது ஒருநாள் செத்து விடுங்கள்,ஹிட்லர்: நமக்கு எதிரிகளே இருக்க கூடாது ,இருந்தால் அவன் நம்மை எதிர்க்க கூடாது ,எதிர்த்தால் அவனுக்கு எதிர்காலமே இருக்க கூடாது, கருணாநிதி:நமக்கு எதிரிகளே இருக்க கூடாது ,இருந்தால் அவன் தேர்தல் பிரசாரதிற்கு போக கூடாது,போனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.நாஞ்சில் சம்பத் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.கட்சி போராளியாக இருந்த நாஞ்சில் சம்பத்தை தமிழின போராளி ஆக்கிய கருணாநிதிக்கு நன்றி .
நீதி மன்ற புறக்கணிப்பு குறித்து கருணாநிதி:இது வழக்கறிஞர்-களுக்கும் நீதி மன்றத்திற்கும் இடையே உள்ள பிரச்னை.இனி சொன்னாலும் சொல்வார்: மின்வெட்டு குறித்து, கருணாநிதி:இது மக்களுக்கும் மின்சாரத்திற்கும் இடையே உள்ள பிரச்னை.ஈழ தமிழர் குறித்து,கருணாநிதி:இது மரணத்திற்கும் மக்களுக்கும் இடையே உள்ள பிரச்னை.
ஸ்பெக்ட்ரம் குறித்து,கருணாநிதி:இது ஸ்பெக்ட்ரம்-திற்கும் ராஜாவுக்கும் இடையே உள்ள பிரச்னை.
சட்டம் ஒழுங்கு குறித்து,கருணாநிதி:இது சட்டத்திற்கும் ஒழுங
நன்றி அருள்

Sunday, March 22, 2009

இந்திய மருத்துவக் குழுவினரின் உள்நோக்கம் என்ன..?

இந்திய மருத்துவக் குழுவினரின் உள்நோக்கம் என்ன..?
திகதி: 22.03.2009 //
வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக் காக சிகிச்சையளிக்கும் நோக்கில் புல்மோட்டை பகுதியில் மருத்துவ வசதிகளை வழங்கி வரும் இந்திய மருத்துவர்களின் உள்நோக்கம் அம்பலத்திற்கு வந்துள்ளது. மருத்துவர்கள் என்ற போர்வையில் வந்துள்ள குழுவினர் அனைவரும் இந்திய இராணுவத்தின் புலனாய்புப் பிரிவினரால் "றோ" அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.



இம் மருத்துவக் குழுவில் 1987ம் ஆண்டு வந்த இந்திய அமைதிப்படையினரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கான உதவி என்ற போர்வையில் வன்னியிலுள்ள மக்களை படுகொலை செய்யும் சிங்கள இராணுவத்திற்கு பெரும் உதவிகளை மேற்கொள்வதற்காகவே இவர்கள் இங்கு வந்தள்ளதாக தெரிய வருகின்றது.
இம்மருத்துவர்கள் இடுப்பில் ஏதோ ஒரு கூரான பொருளை வைத்திருப்பதாகவும் இது அநேகமாக கைத்துப்பாக்கியாவும் இருக்கக்கூடும் எனவும் சிகிச்சை பெற்றுத் திரும்பிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் எந்தவித பதட்டமுமின்றி சேவையில் ஈடுபடு வதாகவும். அதிகமாக அங்கு சிறு காயங்களுக்காக சிகிச்சை பெற வந்த மக்களிடம்
'இன்னும் எவ்வளவு விடுதலைப்புலிகள் அங்கு இருக்கிறார்கள்?
விடுதலைப் புலிகளின் தலைவர் இப்போது எங்கே இருக்கிறார்?
புலிகளுடைய விமானங்கள் எங்கு இருக்கின்றன?
போன்ற விடையங்களை மக்களிடம் கேட்கின்றனராம். இன்னும் சிலரிடம் வன்னியிலுள்ள சில இடங்களின் பெயர்களைக்கூறி அவை எங்கிருக்கின்றன. எதற்கு அருகில் இருக்கின்றன போன்ற விடையங்களை கேட்கின்றனராம்.
இம் மருத்துவ குழுவினர் உண்மையான மருத்துவ சேவையில்லாமல் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் பணிபுரிவதாக தமக்குத் தெரிவதாக மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இது இந்திய மருத்துவக் குழுவினரின் மருத்துவ முகாம் அன்றி ஏதோ விசாரணைமுகாம் போல இருப்பதாக பொதுமகன் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இம் மருத்துவக் குழு முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மக்களில் மூவர் இறந்தமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு பகுதியில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் ஆட்லறி, பீரங்கித் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை இம் மருத்துவ குழுவைச் சேர்ந்தவர்கள் வழங்கிவருவதாகவும் விமானத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தகவல்களை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
சிறிலங்கா இராணுவத்திற்கு இராணுவத் தளபாடங்களை ரஸ்யா, சீனா, ஈரான், இந்தியா வழங்கி வருகின்ற போதிலும் இந்தியா வன்னி போர் களத்தில் நேரடியாக தலையிட்டு சிறிலங்கா இராணுவத்தினரை நெறிப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Saturday, March 21, 2009

மெல்பேர்ணில் வரலாறு காணாத 'உரிமைக்குரல் பேரணி

மெல்பேர்ணில் வரலாறு காணாத 'உரிமைக்குரல் பேரணி:
4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
[சனிக்கிழமை, 21 மார்ச் 2009, 04:02 பி.ப ஈழம்]
அவுஸ்திரேலியாவின் விக்டோறிய மாநிலத்தில் உள்ள மெல்பேர்ண் நகரில் சுதந்திர தமிழீழத்துக்கான 'உரிமைக்குரல்' பேரணி இன்று மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது. 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இன்றைய நிகழ்வு மெல்பேர்ண் நகரில் இற்றை வரை நடைபெற்ற அனைத்து தமிழ் நிகழ்வுகளுக்கும் மகுடம் சூட்டியது போன்று காணப்பட்டது. இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் முகங்களே தெரியாத அளவுக்கு பார்த்த இடம் எங்கும் தமிழீழத் தேசியக் கொடிகளும் தமிழீழத் தேசியத் தலைவரின் உருவப்படங்களும் ஆயிரக்கணக்கில் மக்களின் கைகளில் மிதந்து கொண்டிருந்தன. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மெல்பேர்ண் கிளையுடன் இணைந்து மெல்பேர்ணை தளமாக கொண்டியங்கும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் மெல்பேர்ண் நகரின் மத்தியில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அகவணக்கத்துடன் தொடங்கியது.













"எங்கள் நிலமே எமக்கு வேண்டும்"
"எங்கள் தலைவன் பிரபாகரன்"
"எங்களுக்கு வேண்டியது தமிழீழம்"
"முல்லைத்தீவில் ஆமியா தலைவனுக்கே சவாலா"
"காந்தி தேசம் சொல்லுது; புத்த தேசம் கொல்லுது"
"சூரியப்புதல்வன் பிரபாகரன்"
"அவுஸ்திரேலியா தமிழரை காப்பாற்று""சிறீலங்காவே தமிழினப்படுகொலையை நிறுத்து"
போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அவுஸ்திரேலிய சோசலிச கட்சியினர், சிறிலங்காவில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று பேரணியில் கலந்துகொண்டவர்களின் கையெழுத்துக்களை பெற்றுக்கொண்டனர்.
தாயகத்தில் தமிழ் உறவுகள் முகம் கொடுத்து வரும் மனிதப்பேரவல காட்சிகள் அடங்கிய இறுவட்டுகளும் தாயக நிலவரம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் பேரணியை பார்வையிட்டுச் சென்ற பல்லின மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.
முற்பகல் 11:30 நிமிடமளவில் சுதந்திர சதுக்கத்தில் இருந்து புறப்பட்ட பேரணி சுவான்ஸ்டன் வீதி மற்றும் பேர்க் வீதி வழியாக சென்று வி்க்டோறிய மாநில நாடாளுமன்ற கட்டட முன்றலை சென்றடைந்தது.
வீதி ஓரமாக சென்றுகொண்டிருந்த பேரணிக்கு காவல்துறையினர் முழு பாதுகாப்பும் வீதி ஒழுங்குகளையும் மேற்கொண்டு வந்தனர். காவல்துறையினருடன் இணைந்து தமிழ்த் தொண்டர்களும் வீதி ஒழுங்கமைப்பில் பணியாற்றினர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவரது கைகளிலும் தேசியக்கொடியும் தேசியத் தலைவரின் படமும் காணப்பட்டமை எழுச்சிபூர்வமாகவும் கண்கொள்ளா காட்சியாகவும் காணப்பட்டது.
பேரணியில் மக்கள் போட்ட முழக்கங்கள் வானை கிழித்தது. அனைத்து இன மக்களையும் ஒரு கணம் நின்று பார்க்க வைத்தது.
பேரணி நாடாளுமன்ற கட்டட முன்றலை அடைந்ததும் அங்கும் மக்கள் முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து, எழுச்சி உரைகள் இடம்பெற்றன.
தமிழின உணர்வாளர் ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை, மூத்த குடிமக்கள் சார்பில் குணரட்ணம் ஆகியோர் உரையாற்றினர்.
இதனை அடுத்து, விக்டோறிய மாநில முதல்வருக்கான மனுவை ஈழத்தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவகுமார் படித்தார். பின்னர் அந்த மனு விக்டோறிய மாநில முதல்வரை சேர்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
- உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் - வன்னி வாழ் உறவுகளின் உடனடித் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய வழிவகை செய்யப்பட வேண்டும் - தமிழர்கள் தாம் நிம்மதியாக வாழும் பூர்வீக நிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அனுமதிக்கக்கூடாது - ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் - தமிழர்களின் பாதுகாப்பு கவசங்கள் களையப்படக்கூடாது.
ஆகிய விடயங்களை சிறிலங்காவில் உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்பின்னர், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சபேசன் உரையாற்றினார்.
நிகழ்வு பிற்பகல் 1:45 நிமிடமளவில் நிறைவுபெற்றது.
இன்றைய நிகழ்வுக்கு சிட்னியில் இருந்தும் இளையோர் வந்து பேரணிக்கு மிகவும் ஒத்துழைப்பு நல்கியமை குறிப்பிடத்தக்கது

திலீபன், காந்தி, அகிம்சைஇன் உண்மை.



திலீபன், காந்தி, அகிம்சை





திலீபன் 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரைத் தமிழீழ விடுதலைக்காக அர்ப்்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சைப் போராட்டத்தை, அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மகாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கித் தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார். அகிம்சை வழியில் தன் விடுதலையைப் பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தைக் கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.
திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையைப் பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன். திலீபனுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திலீபன் காந்தீய வழியில் தன் போராட்டத்தை முயன்றார். ஆனால் காந்தியைப் போல முயலவில்லை. திலீபன் தன் உயிரை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அகிம்சை ஒரு நெடிய போராட்டம். போராடிக் கொண்டே இருக்கலாம். முடிவு போராட்டத்தின் கையில் இல்லை. எதிராளியின் வலிமையைப் பொறுத்தே உள்ளது. அகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்குக் காரணமாக அமைந்து விட வில்லை. இந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் இந்தியா விடுதலையான அதே நேரத்தில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்றவற்றின் விடுதலைக்குக் காரணமாக அமைந்தது எது ? அகிம்சையா ?"
காந்தி தாத்தா வாங்கிக் கொடுத்த சுதந்திரம்" என பாடப்புத்தகங்களும், திரைப்படங்களும், ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய அகிம்சை பிம்பம் நம் மூளையைச் சலவை செய்ததில் இருந்து நாம் வெளியேறவேயில்லை. இந்தியா பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் ஒரு காலனியாக உருமாறியத்தற்கும் சரி, பிறகு விடுதலையானதற்கும் சரி - முக்கிய காரணம் - பொருளாதாரம் தான்.
in the larger world it came eventually to be realized that colonial territory was only marginally relevant to economic progress, if it was relevant at all. The dissidence and revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers are often credited with bringing the colonial era to end. More attention might well be accorded to the rather simple but persuasive fact that colonies had become no longer economically worthwhile. Territory was not the thing.
என்று தன்னுடைய "A Journey Through Economic Time" என்ற புத்தகத்தில் கூறுகிறார் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் கால்பிரைத். காலனியாதிக்கத்தின் விடுதலைக்கு revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers தான் காரணம் என்பதை கால்பிரைத் மறுக்கிறார். காலனியாதிக்கத்தின் முடிவுக்கு colonies had become no longer economically worthwhile என்பது தான் காரணம் என்கிறார் கால்பிரைத். இவரின் இந்த வாதம் தவிர வரலாற்றைப் பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இது நமக்குத் தெளிவாகப் புரியும். சோழர் கால வரலாறு முதல் இன்றைய இராக் யுத்தம் வரை அனைத்திற்கும் பொருளாதாரம் தான் அடிப்படைக் காரணமெனும் பொழுது அந்தப் பொருளாதாரக் காரணிகளை விலக்கியே வரலாற்றை மக்களுக்கு நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.
இன்றளவும் உலகில் உருவான பன்னாட்டு தனியார் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்த நிறுவனம் - பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி தான். வணிக நோக்கங்களுக்காக உள்ளே நுழைந்து பின் படிப்படியாக நாடு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசிடம் சென்று சேர்ந்தது வரலாறு. பொருளாதாரக் காரணங்களுக்காக முதலில் தொடங்கிய காலனியாதிக்கம், பின்பு படிப்படியாக மாறி நாடு பிடிக்கும் ஆசையாக உருவெடுத்தது. பின் தங்கள் நாட்டின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிற நாடுகளைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதாக மாற்றம் பெற்றுவிட்டது. இவ்வாறு உருவான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒரு கட்டத்தில் உலகின் கால்வாசி இடத்தை தன் வசம் வைத்திருந்தது. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இவ்வாறு உருவான நிலையில் தான் இந்த மிகப் பெரிய பரப்பளவை நிர்வகிப்பதில் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டது.
இந்தச் சூழ்நிலையில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் தான் இந்தியா உள்ளிட்ட பல காலனியாதிக்க நாடுகள் விடுதலை பெற முக்கியக் காரணமே தவிர, அகிம்சைக்குப் பெரிய பங்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை. இரண்டாம் உலகப் போர் ஐரோப்பிய நாடுகளுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. போரினால் நிர்மூலமான பொருளாதாரத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்தது. அவ்வாறான தேவைக்கு இடையே ஒரு தூர தேசத்தில் இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளை பராமரிப்பது பெருத்த சவால் மிகுந்த காரியமாகவே இருந்தது.
இந் நிலையில் தான் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் விடுதலை பெற்றன. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை மிக வலுவான பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் விளங்கிய பிரிட்டன் போருக்குப் பின் உலக அரசியலில் தன் முக்கியத்துவத்தை இழந்து அமெரிக்காவும், சோவியத் யூனியனும் வலுப்பெறத் தொடங்கியதன் பிண்ணனியும் இந்திய விடுதலையின் பிண்ணனியும் ஒன்று தான் - அது பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சரிவு.
காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்ற வகையில் அகிம்சை இந்திய விடுதலைக்கு முக்கிய காரணமாக உருவாக்கப்பட்டதே தவிர, இந்திய விடுதலை அகிம்சையால் மட்டுமே நிகழவில்லை.காந்தியின் அகிம்சைப் போராட்ட முறையாகட்டும், பாலஸ்தீனம், இலங்கை, காஷ்மீர் போன்ற இடங்களில் நடக்கும் ஆயுதப் போராட்டமாகட்டும் - இவற்றுக்கு ஒரு பொதுவான அடிப்படை உள்ளது. தங்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்க, தாங்கள் எதிர்த்துப் போராடும் நாடுகளின் பொருளாதார அடித்தளத்தை தகர்ப்பது தான் இந்த பொதுவான நோக்கம். காந்தியின் நோக்கமும் அது தான், பிரபாகரனின் நோக்கமும் அது தான், ஹமாஸ் அமைப்பின் நோக்கமும் அது தான். ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலையை ஆதரிக்காத காந்தி, பிறகு நடத்திய பல போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கத் தான் முற்பட்டது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி அகிம்சை.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றாலும், அந்த அரசாங்கத்தை பிரிட்டிஷாரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடத்திக் கொண்டிருந்தவர்கள் "இந்தியர்கள்" தான். இந்தியா போன்ற பெரிய நாட்டினை நிர்வாகிக்க கூடிய ஆட்பலமோ, இராணுவ, காவல்துறை எண்ணிக்கை பலமோ (ஆயுத பலம் அல்ல) பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இல்லை. அவர்கள் இந்தியர்களைச் சார்ந்தே தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அவ்வாறான நிலையில் பிரிட்டிஷ் ஆட்சியை முடக்க வேண்டுமானால் அவர்கள் செயல்படுவதை முடக்க வேண்டும். இந்தியர்கள் பிரிட்டிஷ் வேலையைப் புறக்கணித்தால், பிரிட்டிஷாரின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அதைத் தான் காந்தி செய்ய முயன்றார். ஆனால் அதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றார் என்பதை வரலாற்றைப் புரட்டுபவர்களுக்குப் புரியும்.இங்கு கவனிக்க வேண்டியது, ஆயுதப் போராட்டம் இல்லாமலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதைக் காந்தி முன்னெடுத்தார். அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்கவில்லை என்றாலும் ஒரு புது போராட்ட முறையை அறிமுகப்படுத்தியிருந்தார்.ஆனால் இந்த நிலையா இன்று ஆயுதப் போராட்டம் நடைபெறும் நாடுகளில் உள்ளது? மக்கள் எண்ணிக்கை, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சிறுபான்மையாக உள்ளவர்களின் போராட்டம் எந்த வகையிலும் அகிம்சையைக் கொண்டு நடக்க முடியாது. காரணம் இலங்கைப் பொருளாதாரம் தமிழர்களை நம்பி இல்லை. இந்தியப் பொருளாதாரம் காஷ்மீரை நம்பி இல்லை. இந்தச் சிறுபான்மை இனத்தவரின் அகிம்சைப் போராட்டத்தை நசுக்கக் கூட வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் கூட இந்தப் போராட்டம் பல ஆண்டு காலம் நடந்து கொண்டே இருக்கும். இது தான் இலங்கையிலும், காஷ்மீரிலும் ஆரம்ப காலங்களில் நடந்தது.இத்தகைய நிலையில்தான் அகிம்சை என்பது அர்த்தமில்லாமல் போய் விட்டது. இலங்கை, பாலஸ்தீனம், காஷ்மீர் போன்ற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அவர்கள் எதிர்த்துப் போரிடும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதில் தான் உள்ளது. அதனால் தான் ஆயுதப் போராட்டங்கள் தொடங்குகின்றன. ஒரு விடயத்தைக் கவனிக்கலாம்.
இன்று இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியிருக்காவிட்டால் இலங்கை பொருளாதார ரீதியில் நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும். சிங்கள ஆதிக்கம் முழுமை பெற்றிருக்கும். மாறாக ஆயுதப் போராட்டம் சிங்கள ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாமல், இலங்கையின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்தும் இருக்கிறது.அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறை அல்ல. அது ஒரு கவன ஈர்ப்பு. இந்தக் கவனயீர்ப்பைக் காந்தி சரியாக நடத்தினார். ஆனால் திலீபன் அகிம்சையைத் தன் போராட்ட வடிவமாக எடுத்தார். அதன் பலன் அவர் உயிர் இழப்பு.திலீபனின் நினைவு தினம் அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறையல்ல என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி விட்டுச் செல்கிறது

Friday, March 20, 2009

மக்களே மாற்றம் தேவை; சிந்திங்கள்

இன்று வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் சிக்கியது இந்த வலைப்பதிவு. ஏதோ சில்லறை வோணும்னு சொல்றாகளே என்னா மேட்டருன்னு போய் பாத்தா…”ஈழத்தமிழர் பிரச்சினையை ஓட்டரசியல் ஆக்குவோம்” என்று காரசாரமாக போட்டுத்தாக்கியிருந்தார்கள். கொஞ்சம் பின்னே போனால், ” தமிழகக்திற்கு மாற்றம்: காங்கிரசுக்கோ,திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ, ஓட்டு போடக்கூடாது; போட மாட்டோ ம்” என்று பிளிறி இருந்தார்கள். யார்ராதுன்னு பாத்தா…. நம்ம குழலி! அப்ப பா.ம.கவுக்கு? நிச்சயம் பா.ம.கவுக்கு ஓட்டுப்போட்டுத்தான் ஆக வேண்டும்.. ஏன்னா, இவுக தான் மத்திய அரசுல இருந்துகிட்டு இலங்கை ராணுவத்துக்கு ஆயுதம் கொடுப்பதையெல்லாம் தட்டிக் கேட்டுப் புடுங்கிக் கத்தை கட்டிவிட்டார்களாச்சே..
அட, கொறஞ்சது “அய்யா.. நமக்கும் உனக்கும் இனி ஆவாது. நீ எங்க மக்கள கொல்றவனுக்கு ஆயுதம் தர்ரே.. நீயே கூட நின்னு கொல்றே.. நமக்குள்ளே ஒட்டாது.. அத்துக்கலாம்”அப்படின்னு சொல்லி காங்கிரஸ் கூட்டனியிலிருந்தாவது வெளியே வந்திருந்தா… லிஸ்டுல பா.ம.க பேர் விட்டுப்போனது நியாயம்னு சொல்லலாம். அட இவங்கய்யாவே இன்னும் சொனியா காலை நக்கிட்டு இருக்கான்… கேவலம் அமைச்சர் பதவி - அத்தத் தூக்கியெறிய மனசில்லெ - துப்பில்லெ… பொறுக்கி அரசியல் ( அதாவது காங்கிரஸ் போடறதபொறுக்கித் திங்கர அரசியல் ) செய்யற கட்சி பா.ம.க - அந்தாளு போன வாரம் பேப்பர்ல சொல்றான் “ஜெயலலிதா கூட கூட்டனி வைக்க கருணாநிதி நிர்பந்திக்கிறார்” அப்படின்னு… எந்த ஜெயலலிதா…….? விடுதலைப்புலிகளையல்ல - ஈழத்தமிழ் மக்களையே எதிரிகளாகக் கருதும் ஜெயலலிதா! விடுதலைப்புலிகளையல்ல - ஈழத்தமிழ் மக்களின் ஈரக்குநலயை அறுத்தெறியத் துடிக்கும் பாப்பாத்தி ஜெயலலிதா! நல்லா இருக்குடா ஓன் யோக்கியத… இவனெல்லாம்…. தமிழினவாதி - தமிழ் குடி தாங்கி - லொட்டு… லொசுக்கு - மயிறு….மட்டை.
நம்ம நன்பர் குழலி நியாயமா பா.ம.கவயும் லிஸ்ட்ல சேர்த்திருந்தா பாராட்டியிருக்கலாம். செல்லமா சொல்றாப்ல.. “ராமதாஸ் மீனுக்கு வாலாகவும்….பாம்புக்குத் தலையாகவும்….”…ஏன் மென்னு முழுங்கறீங்க?? நான் சொல்றேன் - ராமதாஸ் மொத்தமாகவே பாம்பு தான்! சாதி தான் ராமதாஸின் அரசியல்.. இந்த தமிழினவாதி வேஷமெல்லாம் ஒரு பரந்து பட்டதளத்தில் பா.ம.கவை எஸ்டாப்ளிஷ் செய்யும் முயற்சி. அந்நியர் ஓட்டு பா.ம.கவுக்கு இல்லை என்ற செருப்படி பட்டவுடன் இப்போ தமிழின அரசியலைக் கையில் எடுத்துக் கொண்டு டகுல் பாச்சா காட்டுகிறார் - அதையும் ஒழுங்கா செய்யாம சொதப்பல் வேறு - வேணும்னா டகுல் பாச்சா காட்டுவது எப்படி என்று சீனியர் ராமதாஸான கருணா(நிதி)விடம் போய்ஜூனியர் கருணா(நிதி)யாகத் துடிக்கும் ராமதாஸ் ட்யூஷன் கற்றுக் கொள்ளலாம்.
ஈழத்தமிழர் பிரச்சினையை ஓட்டரசியல் ஆக்குவார்களாம். எதுக்கு……?
இன்னிக்கு காங்கிரஸ் காலை நக்குவதில் இருந்து முன்னேறி இன்னொருத்தன் காலை நக்குவதற்கா? இந்திய ஓட்டரசியல் சட்டகத்திற்குள் நின்று கொண்டு எந்தக் கொம்பனாக இருந்தாலும் ஈழ விடுதலைக்காக ஒரு மயிரையும் புடுங்கி விட முடியாது. ஈழ விடுதலை என்றில்லை இந்தப் பிராந்தியத்தில் நிகழும் எந்த இன விடுதலைப் போராட்டத்தையும் இந்தியா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்..
சேஞ்சு சேஞ்சுன்னு ஓபாமா கணக்கா பிளிர்ராங்களே… அப்படி அந்த ஓட்டரசியலின் லிமிட்டேசன் என்னவென்பது தமிழகத்தில் பாயில் சுச்சா போகும் சுள்ளான் கூட சொல்லி விடுவான்.. தி.மு.க ஏற்கனவே வெளக்கெண்ணையில் குண்டி கழுவிக்கொண்டிருக்கிறது… இலங்கைக்கு ஆயுத உதவி செய்வது மத்திய அரசின் உரிமை அதையெல்லாம் நம்மாளே கேட்க முடியாதுன்னு சொல்லியாச்சு….. மனித சங்கிலி, ஆட்டு சங்கிலி, மாட்டு சங்கிலி, குரங்கு சங்கிலின்னு கலைஞர் கைவசம் ஏகப்பட்ட ஐடியா இருக்கு.. முழுமையான தரகுவர்க்க கட்சியாகிவிட்ட தி.மு,க இந்தப் போரில் இந்திய ஆளும் தரகு வர்க்கத்தின் அடிப்படை நோக்கத்திற்கு மாறாக வாயைத் திறக்கக் கூட முடியாது.
காங்கிரசுக்கும் அ.தி.மு.கவுக்கும் தமிழன் செத்தா சந்தோஷம்; அவன் ஈழத்தமிழனா இருந்தாலும் சரி தமிழகத் தமிழனா இருந்தாலும் சரி. பாமக யோக்கியதை என்னான்னு இன்னொரு தடவ சொல்லத் தேவையில்லை… திருமா ஏதோ பிட்டு போட்டு பாக்கறாரு… ஆனா, தமிழ்நாட்டின் பரம்பரை வழக்கமான தி.மு.க vs அ.தி.முக என்ற தேர்தல் கள நிலைமையை ஒத்துதான் திருமாவின் அரசியல் அமையும். தனியே ஈழத்தை முன்னிட்டு ஒரு கூட்டனி அமைவதற்கான லேசான அறிகுறி கூட இல்லை. வழமை போலவே கூட்டனிக் கணக்குகள் அமைந்து விட்டால்….? அவரும் வைக்கோவைப் போல - அதாவது காயடிக்கப்பட்ட நாயைப் போல - அம்மா கிட்டயோ அய்யா கிட்டயோ அப்ரூவல் வாங்கிட்டுத் தான் மேற்கொண்டு பேசவே முடியும்…
தே.மு.தி.க? இந்தத் தேர்தலுக்கு அப்புறம் விஜயகாந்து சூட்டிங்ல பிஸியாய்டுவார் - இப்பவே கதை கேட்க ஆரம்பித்து விட்டதாக கேள்வி.. ப்ரொடியூசர் கெடைக்கலீன்னா கலைஞர் டீவி மெகா சீரியல்ல அப்பா வேசம் குடுக்கறதா அழகிரி சொல்லியிருக்காரம் !
ச.ம.க ? 1977 ரிலீஸ்
வக்காளி… விஜயகாந்து சரத்துகுமாரெல்லாம் அரசியல்வாதி… இந்த கேவல நிலை தான் இந்திய தேர்தல் அரசியல் வந்து சேர்ந்திருக்கும் நிலை.
அப்புறம் ஒரு ஜோடி தோலாந்துருத்திக இருக்கானுங்க. அதுல ஒன்னு சி.பி.எம் இன்னொன்னு சி.பி.ஐ. மொதல் ஆளு ஜெயா மாமி வீட்டு டாய்லெட்ல அடைப்பை எடுக்க போயிக்கான்.. அடுத்தாளு அவிங்க தோட்டத்துக்கு தண்ணி காட்டப் போயிருக்கான்.. அவ்வளவு தான்
இதெல்லாம் ஒன்னும் வெளங்காது..
சரி…. ஒரு வாதத்துக்காக ஈழ விடுதலையை அங்கீகரிக்கும் கட்சிகள் எல்லாம் கூட்டணி கட்டி தேர்தலை வென்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்து விடுவார்கள்? சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவார்கள் - அவ்வளவு தான் முடியும்! அவ்வளவுக்கு தான் உரிமை இருக்கிறது. சரி அப்படியே தில்லா மைய்ய அரசுக்கு விரோதமாக மாநிலத்தில் ஆட்சியில் இருந்து கொண்டே மக்களை அணி திரட்டினால் - ஆட்சியைக் கலைப்பான் - இல்லேன்னா ராணுவத்தை அனுப்பி நொங்கைக் கழட்டுவான். இங்கே இருக்கும் தேர்தல் அரசியல் என்பது மக்களை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள முடியாத விதிகளைக் கொண்டிருக்கிறது - அப்படியே வருந்திக் கூப்பிட்டாலும் மக்கள் கிட்டேநெருங்க முடியாத அளவுக்கு ஜனநாயகமற்று இருக்கிறது.. எனவே அப்படியான ஒரு நெருக்கடி மத்தியிலிருந்து ஏவிவிடப்படும் போது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்கும் கட்சிகளின் டப்பா டான்ஸாடி விடும்.
இன்னிக்குத் தேதியில் தமிழகத்தில் பரவலாக மக்கள் கொந்தளித்துக் கிடக்கிறார்கள்… ஈழத்திலிருந்து வரும் ஒவ்வொரு செய்தியும் இங்குள்ள தமிழனின் உள்ளத்தை பதறச் செய்து கொண்டிருக்கிறது… அங்கே மக்கள் படும் பாடு நம் உள்ளத்தை குத்திக் கிழிக்கிறது… இந்த உணர்வுகளை அரசியல்படுத்த வேண்டும் ( அரசியல்படுத்த வேண்டும் வோட்டுப்படுத்தக் கூடாது) தமிழக மக்களின் அரசியல் எழுச்சி இந்தியக் கட்டமைப்புக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்னும் நிலை வந்தால் தான் அங்கே போர் நிற்கும். ஆனால் மேற்சொன்ன வலைத்தளமாகட்டும், இன்றைக்கு ஈழப்பிரச்சினையில் களத்திலிறங்கியிருக்கும் ஓட்டுக்கட்சிகளாகட்டும் இதை எப்படி தமது கட்சிக்கு சாதகமான ஓட்டுக்களாக கன்வெர்ட் செய்வதுஎன்பதிலே தான் குறியாக இருக்கிறார்கள்.
ஆனானப்பட்ட கருணாநிதியே இத்தனை வருச தேர்தல் அரசியலுக்குப் பிறகு வந்து சேர்ந்திருக்கும் நிலை இந்தப் பரிதாபகரமான நிலைதான் என்னும் போது.. அரசியலில் பல பழங்களைத் தின்று பல கொட்டைகளையும் சில ***ட்டைகளையும் போட்டவரே இன்றைக்கு சாத்திக்கிட்டு ஓக்காந்திருக்கும் போது… வேறு எவராலும் இந்த தேர்தல் அரசியல் பாதையில் மக்களைத் திரட்டவோ - அதன் மூலம் மைய்ய அரசைப் பணிய வைக்கவோ - அதன்மூலம் ஈழப் போரை முடிவுக்குக் கொண்டுவரவோ - இந்தியாவையும் இலங்கையையும் அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வைக்கவோ - முடியாது.
மக்கள் எழுச்சியை தேர்தல் அரசியல் என்னும் குறுகிய வட்டத்துக்குள் இட்டுச் செல்வது என்பது இவ்வெழுச்சிக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகமாகவே முடியும்.