Friday, March 20, 2009

மக்களே மாற்றம் தேவை; சிந்திங்கள்

இன்று வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் சிக்கியது இந்த வலைப்பதிவு. ஏதோ சில்லறை வோணும்னு சொல்றாகளே என்னா மேட்டருன்னு போய் பாத்தா…”ஈழத்தமிழர் பிரச்சினையை ஓட்டரசியல் ஆக்குவோம்” என்று காரசாரமாக போட்டுத்தாக்கியிருந்தார்கள். கொஞ்சம் பின்னே போனால், ” தமிழகக்திற்கு மாற்றம்: காங்கிரசுக்கோ,திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ, ஓட்டு போடக்கூடாது; போட மாட்டோ ம்” என்று பிளிறி இருந்தார்கள். யார்ராதுன்னு பாத்தா…. நம்ம குழலி! அப்ப பா.ம.கவுக்கு? நிச்சயம் பா.ம.கவுக்கு ஓட்டுப்போட்டுத்தான் ஆக வேண்டும்.. ஏன்னா, இவுக தான் மத்திய அரசுல இருந்துகிட்டு இலங்கை ராணுவத்துக்கு ஆயுதம் கொடுப்பதையெல்லாம் தட்டிக் கேட்டுப் புடுங்கிக் கத்தை கட்டிவிட்டார்களாச்சே..
அட, கொறஞ்சது “அய்யா.. நமக்கும் உனக்கும் இனி ஆவாது. நீ எங்க மக்கள கொல்றவனுக்கு ஆயுதம் தர்ரே.. நீயே கூட நின்னு கொல்றே.. நமக்குள்ளே ஒட்டாது.. அத்துக்கலாம்”அப்படின்னு சொல்லி காங்கிரஸ் கூட்டனியிலிருந்தாவது வெளியே வந்திருந்தா… லிஸ்டுல பா.ம.க பேர் விட்டுப்போனது நியாயம்னு சொல்லலாம். அட இவங்கய்யாவே இன்னும் சொனியா காலை நக்கிட்டு இருக்கான்… கேவலம் அமைச்சர் பதவி - அத்தத் தூக்கியெறிய மனசில்லெ - துப்பில்லெ… பொறுக்கி அரசியல் ( அதாவது காங்கிரஸ் போடறதபொறுக்கித் திங்கர அரசியல் ) செய்யற கட்சி பா.ம.க - அந்தாளு போன வாரம் பேப்பர்ல சொல்றான் “ஜெயலலிதா கூட கூட்டனி வைக்க கருணாநிதி நிர்பந்திக்கிறார்” அப்படின்னு… எந்த ஜெயலலிதா…….? விடுதலைப்புலிகளையல்ல - ஈழத்தமிழ் மக்களையே எதிரிகளாகக் கருதும் ஜெயலலிதா! விடுதலைப்புலிகளையல்ல - ஈழத்தமிழ் மக்களின் ஈரக்குநலயை அறுத்தெறியத் துடிக்கும் பாப்பாத்தி ஜெயலலிதா! நல்லா இருக்குடா ஓன் யோக்கியத… இவனெல்லாம்…. தமிழினவாதி - தமிழ் குடி தாங்கி - லொட்டு… லொசுக்கு - மயிறு….மட்டை.
நம்ம நன்பர் குழலி நியாயமா பா.ம.கவயும் லிஸ்ட்ல சேர்த்திருந்தா பாராட்டியிருக்கலாம். செல்லமா சொல்றாப்ல.. “ராமதாஸ் மீனுக்கு வாலாகவும்….பாம்புக்குத் தலையாகவும்….”…ஏன் மென்னு முழுங்கறீங்க?? நான் சொல்றேன் - ராமதாஸ் மொத்தமாகவே பாம்பு தான்! சாதி தான் ராமதாஸின் அரசியல்.. இந்த தமிழினவாதி வேஷமெல்லாம் ஒரு பரந்து பட்டதளத்தில் பா.ம.கவை எஸ்டாப்ளிஷ் செய்யும் முயற்சி. அந்நியர் ஓட்டு பா.ம.கவுக்கு இல்லை என்ற செருப்படி பட்டவுடன் இப்போ தமிழின அரசியலைக் கையில் எடுத்துக் கொண்டு டகுல் பாச்சா காட்டுகிறார் - அதையும் ஒழுங்கா செய்யாம சொதப்பல் வேறு - வேணும்னா டகுல் பாச்சா காட்டுவது எப்படி என்று சீனியர் ராமதாஸான கருணா(நிதி)விடம் போய்ஜூனியர் கருணா(நிதி)யாகத் துடிக்கும் ராமதாஸ் ட்யூஷன் கற்றுக் கொள்ளலாம்.
ஈழத்தமிழர் பிரச்சினையை ஓட்டரசியல் ஆக்குவார்களாம். எதுக்கு……?
இன்னிக்கு காங்கிரஸ் காலை நக்குவதில் இருந்து முன்னேறி இன்னொருத்தன் காலை நக்குவதற்கா? இந்திய ஓட்டரசியல் சட்டகத்திற்குள் நின்று கொண்டு எந்தக் கொம்பனாக இருந்தாலும் ஈழ விடுதலைக்காக ஒரு மயிரையும் புடுங்கி விட முடியாது. ஈழ விடுதலை என்றில்லை இந்தப் பிராந்தியத்தில் நிகழும் எந்த இன விடுதலைப் போராட்டத்தையும் இந்தியா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்..
சேஞ்சு சேஞ்சுன்னு ஓபாமா கணக்கா பிளிர்ராங்களே… அப்படி அந்த ஓட்டரசியலின் லிமிட்டேசன் என்னவென்பது தமிழகத்தில் பாயில் சுச்சா போகும் சுள்ளான் கூட சொல்லி விடுவான்.. தி.மு.க ஏற்கனவே வெளக்கெண்ணையில் குண்டி கழுவிக்கொண்டிருக்கிறது… இலங்கைக்கு ஆயுத உதவி செய்வது மத்திய அரசின் உரிமை அதையெல்லாம் நம்மாளே கேட்க முடியாதுன்னு சொல்லியாச்சு….. மனித சங்கிலி, ஆட்டு சங்கிலி, மாட்டு சங்கிலி, குரங்கு சங்கிலின்னு கலைஞர் கைவசம் ஏகப்பட்ட ஐடியா இருக்கு.. முழுமையான தரகுவர்க்க கட்சியாகிவிட்ட தி.மு,க இந்தப் போரில் இந்திய ஆளும் தரகு வர்க்கத்தின் அடிப்படை நோக்கத்திற்கு மாறாக வாயைத் திறக்கக் கூட முடியாது.
காங்கிரசுக்கும் அ.தி.மு.கவுக்கும் தமிழன் செத்தா சந்தோஷம்; அவன் ஈழத்தமிழனா இருந்தாலும் சரி தமிழகத் தமிழனா இருந்தாலும் சரி. பாமக யோக்கியதை என்னான்னு இன்னொரு தடவ சொல்லத் தேவையில்லை… திருமா ஏதோ பிட்டு போட்டு பாக்கறாரு… ஆனா, தமிழ்நாட்டின் பரம்பரை வழக்கமான தி.மு.க vs அ.தி.முக என்ற தேர்தல் கள நிலைமையை ஒத்துதான் திருமாவின் அரசியல் அமையும். தனியே ஈழத்தை முன்னிட்டு ஒரு கூட்டனி அமைவதற்கான லேசான அறிகுறி கூட இல்லை. வழமை போலவே கூட்டனிக் கணக்குகள் அமைந்து விட்டால்….? அவரும் வைக்கோவைப் போல - அதாவது காயடிக்கப்பட்ட நாயைப் போல - அம்மா கிட்டயோ அய்யா கிட்டயோ அப்ரூவல் வாங்கிட்டுத் தான் மேற்கொண்டு பேசவே முடியும்…
தே.மு.தி.க? இந்தத் தேர்தலுக்கு அப்புறம் விஜயகாந்து சூட்டிங்ல பிஸியாய்டுவார் - இப்பவே கதை கேட்க ஆரம்பித்து விட்டதாக கேள்வி.. ப்ரொடியூசர் கெடைக்கலீன்னா கலைஞர் டீவி மெகா சீரியல்ல அப்பா வேசம் குடுக்கறதா அழகிரி சொல்லியிருக்காரம் !
ச.ம.க ? 1977 ரிலீஸ்
வக்காளி… விஜயகாந்து சரத்துகுமாரெல்லாம் அரசியல்வாதி… இந்த கேவல நிலை தான் இந்திய தேர்தல் அரசியல் வந்து சேர்ந்திருக்கும் நிலை.
அப்புறம் ஒரு ஜோடி தோலாந்துருத்திக இருக்கானுங்க. அதுல ஒன்னு சி.பி.எம் இன்னொன்னு சி.பி.ஐ. மொதல் ஆளு ஜெயா மாமி வீட்டு டாய்லெட்ல அடைப்பை எடுக்க போயிக்கான்.. அடுத்தாளு அவிங்க தோட்டத்துக்கு தண்ணி காட்டப் போயிருக்கான்.. அவ்வளவு தான்
இதெல்லாம் ஒன்னும் வெளங்காது..
சரி…. ஒரு வாதத்துக்காக ஈழ விடுதலையை அங்கீகரிக்கும் கட்சிகள் எல்லாம் கூட்டணி கட்டி தேர்தலை வென்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்து விடுவார்கள்? சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவார்கள் - அவ்வளவு தான் முடியும்! அவ்வளவுக்கு தான் உரிமை இருக்கிறது. சரி அப்படியே தில்லா மைய்ய அரசுக்கு விரோதமாக மாநிலத்தில் ஆட்சியில் இருந்து கொண்டே மக்களை அணி திரட்டினால் - ஆட்சியைக் கலைப்பான் - இல்லேன்னா ராணுவத்தை அனுப்பி நொங்கைக் கழட்டுவான். இங்கே இருக்கும் தேர்தல் அரசியல் என்பது மக்களை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள முடியாத விதிகளைக் கொண்டிருக்கிறது - அப்படியே வருந்திக் கூப்பிட்டாலும் மக்கள் கிட்டேநெருங்க முடியாத அளவுக்கு ஜனநாயகமற்று இருக்கிறது.. எனவே அப்படியான ஒரு நெருக்கடி மத்தியிலிருந்து ஏவிவிடப்படும் போது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்கும் கட்சிகளின் டப்பா டான்ஸாடி விடும்.
இன்னிக்குத் தேதியில் தமிழகத்தில் பரவலாக மக்கள் கொந்தளித்துக் கிடக்கிறார்கள்… ஈழத்திலிருந்து வரும் ஒவ்வொரு செய்தியும் இங்குள்ள தமிழனின் உள்ளத்தை பதறச் செய்து கொண்டிருக்கிறது… அங்கே மக்கள் படும் பாடு நம் உள்ளத்தை குத்திக் கிழிக்கிறது… இந்த உணர்வுகளை அரசியல்படுத்த வேண்டும் ( அரசியல்படுத்த வேண்டும் வோட்டுப்படுத்தக் கூடாது) தமிழக மக்களின் அரசியல் எழுச்சி இந்தியக் கட்டமைப்புக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்னும் நிலை வந்தால் தான் அங்கே போர் நிற்கும். ஆனால் மேற்சொன்ன வலைத்தளமாகட்டும், இன்றைக்கு ஈழப்பிரச்சினையில் களத்திலிறங்கியிருக்கும் ஓட்டுக்கட்சிகளாகட்டும் இதை எப்படி தமது கட்சிக்கு சாதகமான ஓட்டுக்களாக கன்வெர்ட் செய்வதுஎன்பதிலே தான் குறியாக இருக்கிறார்கள்.
ஆனானப்பட்ட கருணாநிதியே இத்தனை வருச தேர்தல் அரசியலுக்குப் பிறகு வந்து சேர்ந்திருக்கும் நிலை இந்தப் பரிதாபகரமான நிலைதான் என்னும் போது.. அரசியலில் பல பழங்களைத் தின்று பல கொட்டைகளையும் சில ***ட்டைகளையும் போட்டவரே இன்றைக்கு சாத்திக்கிட்டு ஓக்காந்திருக்கும் போது… வேறு எவராலும் இந்த தேர்தல் அரசியல் பாதையில் மக்களைத் திரட்டவோ - அதன் மூலம் மைய்ய அரசைப் பணிய வைக்கவோ - அதன்மூலம் ஈழப் போரை முடிவுக்குக் கொண்டுவரவோ - இந்தியாவையும் இலங்கையையும் அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வைக்கவோ - முடியாது.
மக்கள் எழுச்சியை தேர்தல் அரசியல் என்னும் குறுகிய வட்டத்துக்குள் இட்டுச் செல்வது என்பது இவ்வெழுச்சிக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகமாகவே முடியும்.

No comments: