Monday, March 23, 2009

தமிழ் துரோக தலைவர்கள்

தமிழ் துரோக தலைவர்கள்: ஈழ மக்களின் பிரச்சனைகள் வரும் தேர்தலில் எதிரொலிக்காது.1967 -இல் தமிழர்களுக்காக ஹிந்தி எதிர்ப்பு பிரச்னை செய்து பலர் மாண்ட போது, அதை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் இந்த தலைவர்கள்.ஆனால் இவர்கள் தம் உறவுகளை மட்டும் ஹிந்தி படிக்க சொன்னது தனி கதை.ஹிந்தி மொழியையும் கற்போம், தமிழ் பெயரை சொல்லி நம்மை ஏமாற்றி வரும் கையாலாகத,கண்டன அறிக்கைகளை மட்டும் விடும், தமிழ் துரோகிகளை புறம் தள்ளுவோம்.
ராஜபக்சே-வின் நோக்கம் எல்லாம் தமிழினத்தை அழிக்க வேண்டும் என்பதுதான், இதை அறிந்திருந்தும் நீங்கள் அவன் கூட சேர்ந்து கை-குளுக்குகிரிர்கள், ஆயுதங்களை கொடுத்து தமிழர்களை கொல்ல சொல்கிறிர்கள்,தமிழர்களை கொள்வது தான் உங்கள் திட்டம் என்றால் அதை வெளிபடையாக சொல்லிவிட்டு கொல்லுங்கள்,அதை விட்டுவிட்டு ஐயகோ தமிழினம் அழிகிறதே, சட்டசபை-இல் திர்மானம், MP-க்கள் ராஜினமா, மத்திய அரசை கண்டித்து தந்தி, 48 மணி நேரம் எங்களால் தான் போர் நிறுத்தம் வந்தது, நாங்கள் அதை செய்தோம் நாங்கள் இதை செய்தோம் என்று "எழவு வீட்டில் ஒப்புக்கு ஒப்பாரி வைக்காதிர்கள். உலக தமிழனுக்கே தெரியும் நீங்கள் கொடுத்த குண்டுகளும் தான் ஈழத்தில் தமிழனை கொல்கிறது என்று.நம் இனத்தை அழிக்கும் ராஜபக்சே மட்டும் கொலைகாரன் அல்ல அவனுக்கு ஆயுதங்களை கொடுத்து, வீரர்களை கொடுத்து தமிழினத்தை அழிக்க சொல்லும் ஒவ்வொரு இந்தியனாகிய தமிழனும்-தான்(நான் உள்பட).
மீனவர்களின் துயரங்கள் எல்லாம் உங்களுக்கு எங்கு தெரியபோகிறது, உங்களை சொல்லியும் குற்றமில்லை,பாவம் நீங்கள் உங்கள் தொழில்சாலைகளின் வேலைகள்,கல்லுரி நிர்வாகம், பல புதிய தொலைக்காட்சிகள் தொடக்க வேலைகள்,பாராட்டு விழாக்கள் மற்றும் பல்வேறு விழாக்களில் இடுபடவே நேரம் இல்லை இதையும் தாண்டி நேரம் இருந்தால் சுவிஸ் பேங்க் அக்கௌன்ட் ஒபெநிங் என்று சிலர் பிஸி ஆகி விடுகிறிர்கள்,.அன்று கட்ச-தீவை தாரை வார்த்து கொடுத்து மீனவர்களின் வாழ்வில் தெரு-புழுதியை அள்ளி போட்டிர்கள்,இன்று அதில் கொலைகார ராஜபக்சே கட்டிடங்களை கட்ட போகிறானாம்,இன்று கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் சென்றால் ஸ்ரீலங்கா அரசு சுட்டு கொல்கிறது, அதற்க்கு நீங்கள் கவலை படவேண்டிய அவசியமே இல்லையே என்னென்றால் உங்களிடம்-தான் கண்டன அறிக்கைகள் இருக்கிறதே அதை ஒற்றை விட வேண்டியதுதானே.மக்களின் உயிர்-ரை கூட அரசிலாக்கும் ஒரே இனம் நம் தமிழினம் தான்.ராஜராஜ சோழனையும்,சேரன் செங்குட்டுவனையும்,பொற்கை பாண்டியனையும்,மனுநிதி சோழனையும் சொன்ன நமது வரலாறு, பதவிக்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கும் உங்களை நிச்சயம் காரி-துப்பமல் விடாது.ஈழத்தில் நடக்கும் செய்திகள் தமிழ்நாட்டில் மறைக்கபடுகின்றன.செய்திகளை மறைத்தால் அது செய்தி இல்லாமல் ஆகிவிடுமா?அன்புள்ள செய்தி உடகங்களே நீங்கள் செய்திகளை மறைத்தல் மக்களிடம் இருந்து மறைந்து விடுவிர்கள் என்பது நிதர்சனமான உண்மை.சிலர் டாய்லட் போவதைக்கூட செய்தியாக சொல்லும் தொலைக்காட்சிகள், எம் மக்கள் பதுங்கு குழிகளில் புதைவதை ஏன் சொல்ல மறுக்கின்றன.
தமிழக அரசியல்வாதிகளே, நீங்கள் ஒரு பினதின்னி கழுகுகள், நீங்கள் ஒரு வேடதாரிகள், நீங்கள் ஒரு பதவி வெறியன்கள், நீங்கள் ஒரு கொள்ளைகாரர்கள், நீங்கள் ஒரு தமிழின கொலைகாரர்கள், நீங்கள் ஒரு ராஜபக்சேவின் கைகூலிகள்....., என்று எதிர்காலம் உங்களை சொல்லும். கொடுங்கள் கொடுங்கள் ஆயுதங்களை எல்லாம் கொடுத்து தமிழர்களை கொல்ல சொல்லுங்கள், ஆனால் நீங்கள் மட்டும் ஒருநாள் சாகமலா இருக்க போகிறிர்கள் அன்று உலக தமிழர்களே வெடிவெடித்து கொண்டாடுவார்கள் பல்லாண்டு வாழ்ந்து என்றாவது ஒருநாள் செத்து விடுங்கள்,ஹிட்லர்: நமக்கு எதிரிகளே இருக்க கூடாது ,இருந்தால் அவன் நம்மை எதிர்க்க கூடாது ,எதிர்த்தால் அவனுக்கு எதிர்காலமே இருக்க கூடாது, கருணாநிதி:நமக்கு எதிரிகளே இருக்க கூடாது ,இருந்தால் அவன் தேர்தல் பிரசாரதிற்கு போக கூடாது,போனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.நாஞ்சில் சம்பத் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.கட்சி போராளியாக இருந்த நாஞ்சில் சம்பத்தை தமிழின போராளி ஆக்கிய கருணாநிதிக்கு நன்றி .
நீதி மன்ற புறக்கணிப்பு குறித்து கருணாநிதி:இது வழக்கறிஞர்-களுக்கும் நீதி மன்றத்திற்கும் இடையே உள்ள பிரச்னை.இனி சொன்னாலும் சொல்வார்: மின்வெட்டு குறித்து, கருணாநிதி:இது மக்களுக்கும் மின்சாரத்திற்கும் இடையே உள்ள பிரச்னை.ஈழ தமிழர் குறித்து,கருணாநிதி:இது மரணத்திற்கும் மக்களுக்கும் இடையே உள்ள பிரச்னை.
ஸ்பெக்ட்ரம் குறித்து,கருணாநிதி:இது ஸ்பெக்ட்ரம்-திற்கும் ராஜாவுக்கும் இடையே உள்ள பிரச்னை.
சட்டம் ஒழுங்கு குறித்து,கருணாநிதி:இது சட்டத்திற்கும் ஒழுங
நன்றி அருள்

No comments: